கட்டிய கணவருக்கு துரோகம் செய்த நீ எனக்கு துரோகம் செய்யமாட்டியா??? பின்னர் காதலனின் கொடூர செயல்…!!
தமிழகத்தில் கடலூர் மாவட்டம் முருகன்குடி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மற்றும் மோகனாவுக்கும் இடையே கடந்த 3 வருடங்களாக தகாத உறவு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் ஊரில் இருந்து புறப்பட்ட இருவரும் பெரியமேடு பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் ரூம் எடுத்து தங்கி வந்துள்ளார்கள்.
!Advert!
பின்னர் வீராச்சாமி மது அருந்தியுள்ளார். அது மட்டுமின்றி கஞ்சா போதையில் இருந்த இவர்,கட்டிய உன் கணவனுக்கு துரோகம் செய்த நீ, எனக்கு துரோகம் செய்யமாட்டாய் என்று என்ன நிச்சயம் என்று கேட்டு காதலி மோகனாவிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
!Advert!
ஒரு கட்டத்தில் இந்த தகராறு உச்சக்கட்டத்திற்கு சென்றதால் ஆத்திரம் அடைந்த வீராசாமி தனது வேட்டியால் மோகனாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்து பின்னர் லாட்ஜ் ரூமில் இருந்த மின் விசிறியில் மோகனாவை தூக்கில் தொங்க விட்டு அங்கிருந்து தப்பிசென்றுள்ளார். லாட்ஜ் ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த பொலிஸார் அவரை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்து அவரிடம் பொலிஸார் விசாரனையை நடத்தி வருகின்றனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.