கணவரை பிரிந்து வாழ்ந்த சகோதரியை நகைக்காக கொலை செய்த சகோதரன்…!!
தெலங்கானா மாநிலத்தின் சந்தாநகரை சேர்ந்த 42 வயதுடைய சீதாலட்சுமி என்ற பெண் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டு தனியாக வாழ்ந்து வந்தார்.
கணவரை பிரிந்து வாழும் சீதாலட்சுமியின் வீட்டிற்கு பக்கத்தில் சகோதர உறவான 36 வயதுடைய ரமணா ராவ் என்பவர் வசித்து வந்துள்ளார். மதுவுக்கு அடிமையான ரமணா அந்த பழக்கத்தை சீதாலட்சுமிக்கும் சொல்லி கொடுத்த நிலையில் இருவரும் ஒன்று சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.
!Advert!
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மது போதையில் சீதாலட்சுமியின் வீட்டுக்கு வந்த ரமணா அவரின் கழுத்தில் இருந்த செயினை கழட்டி தருமாறு கேட்டார். இதற்கு சீதாலட்சுமி மறுப்பு தெரிவிக்க அவளின் கழுத்தை நெரித்து கொன்று பின்னர் அவரை தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்துள்ளதாக கூறி நாடகமாடினார்.
!Advert!
ஆனால் சீதாலட்சுமியின் சகோதரர் சிவகுமாருக்கு இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக நினைத்து பொலிஸில் புகார் கொடுத்துள்ளார். பொலிஸார் ரமணாவிடம் நடத்திய விசாரணையில் சீதாலட்சுமியை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். இதை தொடர்ந்து அவரை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.