அதிகாலை 4 மணிக்கு ஆண்களை குளிக்க வைத்து அவர்களுக்கு தீபம் காட்டிய இலங்கை இந்து பெண்கள்..! வதந்தியால் நடந்த அவலம்..!! உண்மையை மக்கள் அறிய பகிருங்கள்…!!
இன்று 40% சதவீத இந்து சமயத்தை சேர்ந்த ஆண்களின் உறக்கத்தை 3 மணியுடன் கெடுத்த நிகழ்வு ஒன்று இலங்கையில் பதிவாகி உள்ளது. இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி வாய்ந்த சிவன் கோயில் ஒன்றின் கசலம் உடைந்து விழுந்ததாக செய்திகள் வைரலானதுடன் ஆண்களுக்கு ஆபத்து என்றும் அவர்களை எழுப்பி காலை 4 மணிக்கு குளிக்க வைத்து சாம்பிராணி போட்டும்,
தீபம் காட்டும் படியும் குறித்த செய்தி வைரலாகி உள்ளது. இந்த செய்தி இலங்கை முழுவதும் பரவிய நிலையில் பெண்கள் வீட்டில் உள்ள பெண்கள் நள்ளிரவில் ஆண்களை எழுப்பி குளிக்க வைத்து தீபம் காட்டியுள்ளனர். இது பேஸ்புக்கில் வைரலானதால் பொலீஸார் சென்று விசாரணை செய்த போது அப்படி ஒரு விடயம் நடக்கவில்லை என்பதை உறுதி செய்தனர்.
இது தொடர்பாக ஆலய நிர்வாக சபையினரை தொடர்ப்பு கொண்டு கேட்ட போது ..: இது முற்றிலும் வதந்தியாகும். இப்படி ஒரு விடயம் நடக்கவில்லை. கோயில் கலசம் அப்படியே இருக்கிறது. இந்த வதந்தியை பரப்பியவர்கள் இறைவனை விளையாட்டுக்கு எடுத்துள்ளனர்.
நாடு மிகப் பெரிய ஆபத்தில் இருக்கும் போது இப்படியான வதந்திகளை பரப்புபவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்..! திருகோணமலையில் உள்ள பிரபல சிவன் கோயிலில் எந்த ஒரு விடயமும் நடக்கவில்லை. முழுவதும் வதந்தியே..மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்…!!