மலேசியா அமைச்சர் சைஃபுதீன் பொது மக்களுக்கு விடுத்த கோரிக்கை…!!!
மலேசியா பொருட்களை வாங்குபடி பொது மக்களுக்கு மலேசிய அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மலாய்க்காரர்கள் உருவாக்கிய பொருள்களை மட்டும் இல்லாமல் பொதுவாக மலேசியப் பொருட்களையும் வாங்குவதற்கு முக்கியத்துவம் வழங்கும் படி மலேசியாவின் உள்நாட்டு வர்த்தக, பயனீட்டாளர் விவகார அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் அந்நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
முஸ்லிம்கள் தயாரித்த பொருள்களுக்கு முன்னுரிமை கொடுக்க அண்மையில் இயக்கம் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர் சைஃபுதீன் இவ்வாறு தெரிவித்தார்.
முஸ்லிம் தயாரிக்கப்படும் பொருள்கள், மலாய்ப் பொருள்கள்’ என்று அழைக்காமல். மலேசியப் பொருள்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன்,” என அமைச்சர் கூறினார் . பூமிபுத்ராக்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு ஒத்துழைக்கும் வேளையில், பிறர் தயாரிக்கும் பொருள்களைப் புறக்கணிக்கும் படியும் சில தரப்பினர் கேட்டுக்கொண்டனர்.
மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது நேற்றைய தினம் குறித்த இயக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.