சிறுநீரக பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வாகும் கொத்தமல்லி கீரை.! இப்படி செய்து சாப்பிட்டால் போதுமானது..!!
இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், நோயை அடியோடு விரட்டவும் மிக சக்தி வாய்ந்தாக கொத்தமல்லிக் கீரை உதவுகின்றது. அட.. என்ன ஒரு வாசனை …! இந்த பேரை சொன்னாலே உங்க மூக்குல ஒரு வாசனை உள்ள போகுமே..! அந்த அளவுக்கு இந்த கொத்தமல்லிக் கீரையில் தனி வாசனையே உள்ளது என்று கூறலாம். இந்த கொத்தமல்லிக் கீரையின் வாசம் மட்டும் இன்றி அதை கடந்து பல மருத்துவ குணங்கள் நிறைந்த நன்மைகளும் உள்ளது.
கொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டும் இல்லாமல் சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். நாங்கள் அன்றாடம் சமைக்கும் உணவுகளில் ( உதாரணமாக : ரசம், சாம்பார்) வாசனைக்காக இந்த கீரையை பயன்படுத்துவார்கள். மேலும் இந்த கொத்தமல்லிக் கீரையில் உப்புச் சுவையும், உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை காணப்படுகின்றது.
கொத்தமல்லிக் கீரையை அன்றாட உணவில் சேர்ப்பதால் நமது உடலுக்கு ஏற்படும் நன்மைகள், அதைப்பற்றி இப்போது பார்ப்போம்..! ஜீரணத்தை தூண்டுகிறது. வாந்தி, விக்கலை தடுக்கிறது. ஆண்மை குறைவை நீக்குகிறது. காய்ச்சல் குணமாக்கும், சிறுநீர் பிரச்சினைகள் தீரும், இந்த கொத்தமல்லிக் கீரையில் விட்டமின் ‘A’ சத்து இருப்பதால், கண் பார்வை தெளிவாக காணப்படும். விட்டமின் ‘C’ சத்தும் அதிகம் இருப்பதால் உடலில் ஏற்படக்கூடிய சொறி, சிரங்கு, அரிப்பு போன்ற தோல் நோய்களை முற்றாக குணமாக்கும் தன்மை உள்ளது. எலும்பு, பற்கள் ஆகியவற்றிற்கு தேவையான கால்சியம் சத்தும் இந்த கொத்தமல்லிக் கீரையில் காணப்படுகின்றது.
இந்த கீரை பசியைத் தூண்டும் சக்தி படைத்துள்ளது. காயங்கள் ,சொறி, சிரங்கு, அரிப்பு ஏற்பட்டால் கொத்தமல்லிக் கீரை, வெந்தயம், மிளகு ஆகியவற்றை எடுத்து இவற்றுடன் எலுமிச்சை சாறு தேவையான அளவு இட்டு அரைத்து பின்னர் சாறு பிழிந்து பித்தத் தழும்புகள் மீது பூசினால் விரைவில் குணம் அடையும்.
இக்கீரையை எண்ணெயில் சிறிது வதக்கி, கட்டிகள், வீக்கங்களின் மீது வைத்துக் கட்டினால் அவை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விடும். கீரையைத் துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் பிரச்சினை தீரும்.
பற்களில் ரத்தம் கசிவு, வாய்ப்புண் மற்றும் வாய் துர்நாற்றம் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிறிதளவு கொத்தமல்லி கீரையை எடுத்து பச்சையாக அப்படியே மென்று, சிறிது நேரம் வாயில் வைத்திருந்து பின்னர் வெளியில் துப்பிவிடுங்கள், பின் வெந்நீரில் வாய் கொப்பளிக்கவும். இப்படி தொடர்ந்து 20 நாட்களில் அந்த பிரச்சினை முற்றிலும் இல்லாமல் போய்விடும்.
மேலும் இந்த கொத்தமல்லிக் கீரை முதுமைப் பருவத்தில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் நீக்கி தேகத்திற்கு அழகையும் ஆரோக்கியத்தையும் தரும்.