மக்கள் கூட்டத்தின் மத்தியில் கொடூரமாக வெட்டிக் கொல்லப் பட்ட புது மாப்பிள்ளை..! கரூரில் நடந்த கொடூர சம்பவம்..!!
கரூரில் மக்கள் முன்னிலையில் கொடூரமாக புது மண ஜோடி வெட்டிக் கொல்லப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் சின்ன ஆண்டான்கோவில் வீதியில் வசித்து வரும் குணசேகரன் என்பவர் கரூர் – கோவை சாலையில் இளநீர் கடை வைத்திருக்கிறார். இவரது மகனான கிருஷ்ணமூர்த்தி அவரது கடைக்கு அருகில் பழக்கடை வைத்திருக்கிறார்.
27 வயதாகும் கிருஷ்ணமூர்த்தி ஷஸ்மிதா என்கிற 23 வயது பெண்ணை காதலித்து அண்மையில் தான் திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில் குணசேகரன் தனது மனைவியுடன் இளநீர் மொத்தமாக கொள்வனவு செய்வதற்காக பொள்ளாச்சி சென்றுள்ளார்.
இதனால் பழக்கடை மற்றும் இளநீர் கடையை கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஷஸ்மிதா பார்த்து வியாபாரம் செய்துகொண்டிருந்த போது அங்கு பைக்கில் வந்த இரண்டு நபர்கள் தங்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்களால் கிருஷ்ணமூர்த்தி யின் தலை மற்றும் கையில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்..உடனடியாக மக்களால் மீட்கப் பட்டு கிருஷ்ணமூர்த்தி தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பட்டப் பகலில் கடை மற்றும் வீதியில் மக்கள் கூட்டம் இருந்த நிலையில் கட்டிய மனைவியின் கண்முன் கொடூரமாக கணவர் வெட்டப் பட்ட சம்பவம் கரூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கரூர் பொலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஷஸ்மிதா இருவரும் காதலித்தது ஷஸ்மிதாவின் வீட்டிற்கு பிடிக்கவில்லை. எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் ஷஸ்மிதா பெற்றோரை எதிர்த்து காதலனை திருமணம் செய்ததுடன் கணவரின் பெற்றோருடன் வசித்து வந்தார். இதனால் காதல் விவகாரத்தால் கொள்ளப் பட்டார என்பதையும் விசாரணை செய்து வருகின்றனர்..!!