உங்களுக்கு “குடல்வால்” நோய் உள்ளது என்பதை கண்டறிவது எப்படி.? இதற்கான அறிகுறிகள் என்ன.? இதோ உங்களுக்காக முழு விபரம்..!!
எம் உடலில் இருக்கும் நோய்களை கணக்கு செய்தால் எண்ணில் அடங்காதவை என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நோய். சாதாரண நோய்களான காச்சல், இருமல், சளி, இப்படி சொல்லிக் கொண்டு போனாலும் சில ஆபத்தான நோய்களும் எனக்கு இருக்கின்றது.
சில நோய்களை கண்டுபிடிக்க முடியாத நோய்களும் உண்டு. இதில் உலகில் இன்றைய காலத்தில் அதிகமாக அறுவை சிகிச்சை செய்யப் படுகின்ற நோய் ஒன்று உண்டு அது தான் ” அப்பெண்டிக்ஸ்” என்கிற குடல்வால் அறுவை சிகிச்சை. இதன் அறிகுறிகள் தென்படும் போதே இதற்கான சிகிச்சையை பெற்றுகொள்ள வேண்டும்
இல்லை என்றால் அதிக விளைவுகளை சந்திக்க நேரிடும். சரி குடல்வால் அழற்சி என்றால் என்ன இது எப்படி ஏற்படுகின்றது என்று பார்க்கும் முன் இதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். 11 வயதின் பின் இந்த நோயின் தாக்கம் அனைவரையும் பாதிக்கலாம்.
குறிப்பாக வெளி உணவு வகைகளை விரும்பி உண்ணுபவர்களை அதிகம் பாதிக்கின்றது. இதன் அறிகுறிகள் இவை தான். அடி வயிற்றில் கடுமையான வலி, அதாவது இது போல் வலி எப்போதுமே ஏற்படவில்லை என்று கூறும் அளவிற்கு இருக்கும். தொப்புள் அருகில் ஏதோ ஒன்று பிடித்து இழுப்பது போல் இருக்கும்.
இது தீவிரம் அடையும் போது இந்த வலி எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். சில நேரங்களில் காச்சல் அதிகமாகும், வாந்தி வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படும் சில நேரங்களில் வயிறுப் போக்குடன் இரத்தமும் வெளியேறும். இவை அனைத்துமே குடல்வால் அழற்சியின் அறிகுறிகள் தான்.
அத்துடன் இவை அப்பெண்டிக்ஸ் நோயின் தீவிரத்தன்மையை குறிக்கிறது. இதனை கண்டுகொள்ளாமல் விட்டால் நிச்சயம் மரணம் வரை எம்மை எடுத்துச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதனை சரியான முறையில் அறிந்துகொண்டு உங்களை காத்துக் கொள்வதோடு அனைவருக்கும் அறிய படுத்தி அனைவரையும் பாதுகாக்க உதவுங்கள். இந்த நோய் வருவதற்கான சரியான காரணங்கள் இன்று வரை வைத்தியர்களால் கூட சரியாக கூற முடியாத போதும் வெளியே உணவுகளை உண்பதை தவிர்க்கும் படி கூறியுள்ளமை கூறிப்பிட தக்க விடயமாகும்..!