பாலியல் பலாத்காரம் செய்து பெற்ற மகளுக்கு எயிட்ஸ் நோயை பரப்பிய கொடூர தந்தை..! தஞ்சாவூரில் நடந்த சம்பவம்..!!
பெற்ற குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து எயிட்ஸ் நோயை பரப்பிய தந்தைக்கு தஞ்சை மகிளா நீதிமன்ற நீதிபதி எழிலரசி 4 ஆயுள் தண்டனை தீர்ப்பளித்தது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தஞ்சாவூர் மதுக்கூரையில் அரசி பள்ளியில் 11 வயது மாணவி ஒருவர் சோர்வுடன் காணப் பட்ட நிலையில் குறித்த மாணவியிடம் ஆசிரியர் ஒருவர் அன்பாக பேசியுள்ளார்.
இதனால் ஆசிரியரிடம் குறித்த மாணவி கூறிய விடயங்கள் அதிர வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக தந்தை குடித்துவிட்டு வந்து தகாத முறையில் நடந்துகொள்வதாகவும் தன்னால் வலி தாங்க முடியவில்லை எனவும் கூறியுள்ளார். அதிர்ந்து போன ஆசிரியர் உடனடியாக குழந்தைகள் நல அமைப்புக்கு தெரிவித்துள்ளார்.
அதிரடியாக செயற்பட்ட குழந்தைகள் நல அமைப்பு பொலீஸாருக்கு அறிவித்ததுடன் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமியை ஒப்படைத்துள்ளது. இந்த நிலையில் காப்பகத்தில் சிறுமி மயங்கி விழுந்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட சிறுமி எயிட்ஸ் நோயால் பாதிக்கப் பட்டது தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து கைது செய்யப் பட்ட சிறுமியின் தந்தையான குமார் என்கிற 37 வயதான நபரை பரிசோதனை செய்ததில் அவருக்கும் எயிட்ஸ் இருப்பது தெரியவந்துள்ளது. 2017ம் ஆண்டு நடந்த இந்த கொடூர சம்பவத்தின் தீர்ப்பு இன்று வெளியான போது.. நீதிபதி எழிலரசி குமாருக்கு 4 ஆயுள் தண்டனை விதித்தும், சிறுமியை மிரட்டியதற்காக 6 மாத சிறை தண்டனையும் 4500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்பளித்துள்ளார்..!!