ஆப்கானிஸ்தானில் உள்ள பிரபல திருமண மண்டபம் ஒன்றில் குண்டு வெடிப்பு…!! 63 பேர் உயிரிழப்பு…!!!
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் உள்ள பிரபல திருமண மண்டபம் ஒன்றில் குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 63 பேர் உயிரிழந்ததோடு 180 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த திருமண நிகழ்வின் போது தற்கொலையாளி வெடிகுண்டைத் தகர்த்ததாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு சுமார் 10. 40 மணிக்கு நடைபெற்றதுள்ளது.
திருமண மண்டபத்தில் ஆண்கள் இருக்கும் பகுதியில் வெடிப்புச் சத்தம் கேட்டதாக விருந்தினர் ஒருவர் கூறியுள்ளார். 20 நிமிடத்துக்கு மண்டபம் முழுதும் புகை மூட்டமாக காணப்பட்டதாக அவர் கூறினார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 10க்கும் அதிகமானோர் உயிரிழந்தோடு, 150 பேர் படுகாயமடைந்தனர். அந்த கொடூர தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.
ஆனால் திருமண மண்டபத்தில் நடந்த தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்க மறுத்துள்ளது. இந்த பதற்றத்தின் மத்தியில் தலிபான் அமைப்புக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடக்கும் அமைதிப் பேச்சு வார்த்தையில் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். கத்தாரின் தலைநகர் டோஹாவில் நடக்கும் சந்திப்புகளில் முன்னேற்றம் இருப்பதாக இருதரப்பும் கூறியுள்ளனர்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.