திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே பிரிந்த குறளரசன் ராஜேந்தர் குடும்பம்..!காரணம் இது தானம்…!
நடிகர் டி. ராஜேந்தர் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், பாடகர் , இசையமைப்பாளர் , என பல திறமைகளை வெளிப்படுத்தியவர்,தற்போது வரை தமிழ் சினிமாவை அதிகம் நேசிப்பவர்களில் இவரும் ஒருவர் .இவரது மூன்று பிள்ளைகளில் இருவர் திருமணம் செய்துவிட்டனர்.
மகளின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருமணம். மகன் குறளரசனின் திருமணம் காதல் திருமணமாக இருந்தது.சிம்பு திருமணம் செய்யாமல் இருக்கும் போது எப்படி தம்பிக்கு திருமணம் செய்து வைப்பது என அமைதிகாத்து வந்த ராஜேந்தருக்கு மகனின் காதலை தடை சொல்ல முடியாமல் போனது.
அதனால் குறளரசன் காதலித்து வந்த முஸ்லீம் பெண்ணான நபீலாஅஹமத்தின் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினார். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடிந்தது. ராஜேந்தர் மகன் குறளரசன் முஸ்லீம் மதத்திற்கு மாறினார்.
இந்த நிலையில் திருமணத்தின் போதே சிம்புவின் தாய் சொன்ன வார்த்தை குறளரசன் கடைக்குட்டி என்பதால் தங்கள் வீட்டில் தான் வாழ வேண்டும் என்பதாகும் . ஆனால் திருமணம் முடித்து சில மாதங்களில் எந்த ஒரு காரணமும் இன்றி தனிக்குடுத்தனம் செல்ல வேண்டும் என நபீலா அஹமத் அடம்பிடித்துள்ளார்.
இதனால் குறளரசன் சென்னை போட் ஹவுஸ் ஏரியாவில் தனிக்குடித்தனம் சென்றுவிட்டாராம். குடும்பம் பிரிந்ததால் சிம்புவின் தாய் சோகத்தில் இருக்கிறாராம். அடிக்கடி குறளரசன் தாயை சென்று பார்க்கிறாராம் இருப்பினும் கடைசி மகன் தங்களுடன் இருப்பான் என நினைத்தது நடக்கவில்லை என கூறி வருகிறாராம்..