நடிகை குஷ்புவால் என் வாழ்க்கை சீரழிந்து விட்டது …பிரபல நடிகை கண்ணீர் பேட்டி…!!
பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் லட்சுமி ஸ்டோர்ஸ். இதில் நாயகியாக நடிகை குஷ்பு நடிக்கிறார். இந்த சீரியல் மக்களிடம் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குடும்பத்தை மையப்படுத்தி நகரும் இந்த சீரியலில் பிரபல விஜேயான நட்ஷத்திரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த சீரியல் முழுவதுமே நட்சத்திராவை சுற்றியே நகர்கிறது என்று சொல்லலாம். இந்த சீரியலில் இன்னுமொரு நடிகையாக நடித்தவர் சீரியல் நடிகை ஜெனிபர். இவர் இரண்டு மூன்று எபிசோட்டுடன் காணாமல் போனார்.
அண்மையில் இவரிடம் இது பற்றி கேட்டபோது..
நடிகை குஷ்பு தான் இத்தனைக்கும் காரணம். மூன்று மாதங்கள் இந்த சீரியலில் நான் நடித்தேன். ஆரம்பத்தில் குஷ்புவிற்கு பின் நான் தான் என கூறினார்கள் என்னை பற்றித் தான் கதை நகரும் என்றார்கள். நானும் முழுமையாக நம்பினேன். திடீரென நட்சத்திரா வந்தார்.
நானும் சிறிய கதாபாத்திரம் என நினைத்தேன் அதன் பின் தான் தெரியும் நான் தான் சின்ன கதாபாத்திரம் என்று. நடிகை குஷ்பு என்னை திரும்பியும் பார்க்க மாட்டார் நட்ஷத்திராவிடம் இந்த கதா பாத்திரத்திற்கு நீ தான் பொருத்தம். வேறு யாருமே சரி வரமாட்டார்கள் என உசுப்பேத்தினார்.
இதனால் நட்ஷத்திரா மெயின் ஆனார் என்னால் தாங்க முடியவில்லை அது தான் வெளியேறினேன். இவை அனைத்துக்கும் காரணம் குஷ்பு தான். நான் செல்லும் இடமெல்லாம் வந்து என் வாழ்க்கையை கெடுப்பத்கே அவரது வேலை என கூறியுள்ளார். !