மாதவிடாய் நாட்கள் தள்ளிப் போகிறதா.? உடனடியாக மாதவிடாய் வர வேண்டுமா.? இதை செய்யுங்கள்.!!
மாதவிடாய் காலங்கள் என்பது முக்கியமானதாகும். ஒவ்வொரு மாதமும் சரியாக 28 நாட்களில் மாதவிடாய் வந்து விட்டால் கவலை பட எதுவும் இல்லை. ஆனால் சிலருக்கு இரண்டு மாதங்கள் மூன்று மாதங்கள் என தள்ளிப் போகும் குறிப்பாக கருத்தடை மாத்திரைகள் பாவிப்பவர்கள் பயந்துவிடுவார்கள்.
கர்ப்பம் இல்லாமல் மாதவிடாய் தள்ளிப் போனால் மட்டும் இந்த மருத்துவத்தை பயன்படுத்தலாம். அல்லது வீட்டில் விஷேசங்கள் இருந்தால் மாதவிடாய் சீக்கிரம் வந்துவிட வேண்டும் என சிலர் மாத்திரைகள் எடுத்துக் கொள்வார்கள் அவர்கள் கூட இதனை பயன்படுத்தலாம். எந்த ஒரு பக்க விளைவும் இல்லாத மருத்துவம் என்பதால் பயமின்றி பயன்படுத்துங்கள்.
இதற்கு தேவையானவை: எள் சிறிதளவு. நாட்டு சர்க்கரை ஒரு கரண்டி, மற்றும் தேன். முதலில் எள் எடுத்து கழுவி காயவைத்து விடுங்கள். பின் அதில் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக தட்டிக் கொள்ளுங்கள். அதாவது ஒன்று இரண்டாக பொடி செய்து கொள்ளுங்கள்.
இப்போது அதில் சிறிதளவு தேன் சேர்ந்து காலையில் மற்றும் மாலையில் என இரண்டு வேளை சாப்பிட்டால் போதுமானது. உடனடியாக மாதவிடாய் சீக்கிரம் வந்துவிடும். இன்றைய யுவதிகள் பலருக்கு இந்த பிரச்சனை உள்ளதால் பகிர்கிறோம். இதனை கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைக்காக முயற்சிப்பவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம்..!