நியூஸிலாந்து கிரிக்கெட் டீமை மண்ணைக் கவ்வ வைத்த மாலிங்க..! உலக லெவலில் சாதனை..!
இலங்கையில் மீண்டும் வருவேன் என தனது பலத்தை டாப் அணியான நியூஸிலாந்து அணியிடம் நிரூபித்து இருக்கிறார் லசித் மாலிங்க. முன்னைய வேகம் இல்லாவிட்டாலும் விவேகத்துடன் போட்டிகளில் கலந்து கொண்டிருந்த லசித் கடந்த IPL தொடரில் மும்பை இந்தியன் அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.
இந்த நிலையில் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேட்கொண்டுள்ள நியூஸிலாந்து அணியுடன் டி20 முதல் போட்டியில் விளையாடிய இலங்கை அணி மண்ணைக் கவ்வியது.அதன் பின் தொடர்ந்து இன்று ஆரம்பித்த டி20 2வது போட்டியில் இலங்கை அணி 125 ஓட்டங்களுக்குள் சுருண்டது. அதன் பின்னர் நியூஸிலாந்து தனது இன்னிங்ஸை தொடங்கியது. மலிங்கா வீசிய முதல் ஓவரில் அணி 3 ரன்கள் எடுத்தது.
இரண்டாவது ஓவரில் முன்ரோ சிக்ஸர், பவுண்டரி என விளாச 15 ரன்கள் கிடைத்தது.இதனால் நியூஸிலாந்து ரசிகர்கள் ஆரவாரம் செய்ய இதிலும் தோல்வி என இலங்கை வீரர்கள் நினைத்துக் கொண்டிருக்க மூன்றாவது ஓவரை வீசிய மலிங்கா முதல் இரண்டு பந்துகளை டாட் பந்துகளாக வீசினார். 3-வது பந்தில் முன்ரோவை க்ளின் போல்ட் ஆக்கினார். இதன் மூலம் சர்வதேச அரங்கில் டி-20 போட்டியில் 100 விக்கெட்டுகளை சாய்த்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இதனை ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் போதே 4-வது பந்தில் ரூதர்ஃபோர்ட் எல்.பி.டபிள்யூ முறையில் வீழ்ந்தார். 5-வது பந்தில் கிராண்ட்ஹோம்மை போல்டாக்கி ஹாட்ரிக் அடித்தார். இந்த ஹாட்ரிக் ரசிகர்களை குஷிப் படுத்தியது . அடுத்த பந்தில் ராஸ் டெய்லரை எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாக்கினார். தொடர்ந்து முக்கியமான விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் நியூஸிலாந்து அணி தடுமாறியது.
தனது திறமையான பந்து வீச்சால் போட்டியை இலங்கையின் பிடிக்கு கொண்டுவந்தார். மீண்டும் தான் ராஜா என்பதை நிரூபித்தார் மலிங்கா.மலிங்காவினால் வெறும் 88 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நியூஸிலாந்து இந்த போட்டியில் தோல்வியை தோல்வியை தழுவியது…!
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.