இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்…!!
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக முன்னர் கூறியிருந்தார். அந்த வகையில் நேற்றைய தினம் நடைபெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் ஒரு நாள் சர்வதேச போட்டியுடன் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தனது 15 வருட கால சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்தும் இலங்கை கிரிக்கெட் உலகத்தை விட்டு முற்றாக ஓய்வு பெற்றுச் சென்றார்.
மேலும் அவர் 2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகிற்கு லசித் மலிங்க இதுவரை 226 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். மேலும் நேற்று இடம்பெற்ற இலங்கை அணி சார்பில் தனது இறுதிப் போட்டியில் விளையாடிய லசித் மாலிங்க பங்களாதேஷ் அணியின் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.
மேலும் இந்த நிலையில் இலங்கை கிரிகெட் அணிக்காக லசித் மலிங்க வழங்கிய சேவையை பாராட்டி, இலங்கை பிரபலங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.