ஸ்ரீலங்கா நீர்கொழும்பில் மீண்டும் ஊரடங்கு! தெற்கில் சமூக வலைத் தளங்கள் முடக்கம்!
ஸ்ரீலங்காவின் நீர்கொழும்பு பகுதியில், இன்று மாலை (கொழும்பு நேரப்படி)இரு தனி நபர்களுக்கு இடையே இடம் பெற்ற வாக்குவாதம் முற்றி கை கலப்பாக மாறியது.
பின்னர் இந்தச் சம்பவம் இரு வேறு சமூக இனங்களுக்கு இடையிலான கலவரமாக உருமாற்றம் பெற்றதை தொடர்ந்து வாகனங்கள் , உடமைகள் எரிக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட சேத விபரங்களை வெளியிட வேண்டாம் என்றும், இக் கலவரத்தை தூண்டும் செயற்பாடுகளினை பகிர வேண்டாம் என்றும் ஸ்ரீலங்கா அரசு ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது.
நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில்,தற்போது இந்தப் பகுதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.இதே வேளை இச் சம்பவத்தை தொடர்ந்து ஸ்ரீலங்காவின் தென் பகுதியில் மீண்டும் சமூக வலைத் தளப் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொறுப்புத் துறப்பு: இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இன்றைய வேண்டுகோளுக்கு அமைவாக இன முறுகலை தோற்றுவிக்காத வகையில் செய்தி தணிக்கைக்கு உட்பட்டு இச் செய்தி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரும்பதம் : கை கலப்பு – சண்டை