இலங்கையில் இடம் பெற்றது தற்கொலை குண்டுத் தாக்குதலே!! உறுதியான செய்திகள் வெளியாகியது!!
ஸ்ரீலங்காவில் இயேசு உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம் பெற்ற வெவ்வேறு 9 குண்டு வெடிப்புச் சம்பவங்களில், இது வரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, 228 பேர் உயிரிழந்திருப்பதுடன், 470 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். இந்தக் கொடூர சம்பவத்தை அடுத்து, ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களம் , மற்றும் பாதுகாப்பு அமைச்சினால் அமுல்படுத்தப்பட்ட கால வரையறை அற்ற, நாடு தழுவிய ரீதியில் அவசர கால ஊரடங்குச் சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. தாக்குதல்கள் தொடர்பான அறிக்கை தயாரிப்பதற்கு உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்படும் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால அறிவித்துள்ளார்.
இச் சம்பவங்களை அடுத்து இரண்டு விசேட அமைச்சரவைக் கூட்டங்கள் நேற்றைய தினம் ஸ்ரீலங்காவில் இடம் பெற்றுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான முன் எச்சரிக்கை தகவல்கள், பாதுகாப்பு மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவினருக்கு, வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கள் மூலமாக ஒரு வார காலத்திற்கு முன்பதாகவே அனுப்பி வைக்கப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. தவிர இந்தத் தாக்குதலை அடிப்படை வாத நோக்கம் கொண்ட ஓர் கும்பல் தீவிரமாகத் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளதாகவும், தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் 21 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உங்களுடைய Android Smart Phone , இல் மிக வித்தியாசமான ஒலித் தெளிவில் 24 மணி நேரமும் சூப்பர் ஹிட் பாடல்களை 3D ஒலித் தெளிவில் கேட்டு மகிழ ஆசையா? இப்போதே , இங்கே க்ளிக் செய்து, Southradios இன் Android Mobile Application இனை டவுண்லோட் செய்யுங்கள். காதில ஹெட்போனை மாட்டுங்க, ஒரு தடவை புரட்சி வானொலியை கேட்டு பாருங்கள், தினந் தோறும் செய்திகளையும் நீங்கள் படிக்கலாம். அப்புறம் சொல்லுங்க Quality எப்படீன்னு? ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக ஒரே அப்ளிக்கேசனில்!!
IOS / Apple Device இல் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் புரட்சி வானொலி கேட்கனுமா? இங்கே க்ளிக் செய்து நமது அப்ளிக்கேசனை டவுண்லோட் செய்யுங்கள், ஒரே அப்ளிக்கேசனில் 25 இற்கும் மேற்பட்ட வானொலிகள் உங்களுக்காக
நாடளாவிய ரீதியில் , நேற்று மாலை இடம் பெற இருந்த தாக்குதல்கள் , வெள்ளவத்தை ராம கிருஷ்ணா வீதியில் சிற்றூர்தி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட வெடி பொருட்களை கையகப்படுத்திய பொலிஸார், அச் சிற்றூர்தியினைச் செலுத்திச் சென்ற நபரையும் கைது செய்துள்ளார்கள். தாக்குதலாளிகள் தங்கியிருந்ததாக கூறப்படும் வீடொன்றை பாணந்துறை பகுதியில் கண்டு பிடித்திருப்பதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் கூறுல்கின்றன. கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் விமான நிலையத்திற்கு சமீபமாக உள்ள பைப் லைனில் இருந்தும் குண்டுப் பொதியொன்று மீட்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தெமட்டகொட தொடர்மாடிப் பகுதி வெடிப்புச் சம்பவத்தினை அடுத்து அச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புத் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
Photo Credits To :Dinuka Liyanawatte/Reuters
வெளிநாட்டுப் பயணத்தினை மேற்கொண்டிருந்த, ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நேற்று நள்ளிரவு சிங்கப்பூர் நாட்டிற்குச் சொந்தமான விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளார். இன்று முதல் தொடரூந்து, பேரூந்துச் சேவைகள் யாவும் வழமைக்குத் திரும்பும் என்று அறிவித்தல் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதலுக்குத் சர்வதேச காவல் துறை விசாரணை நாடப்படும் என ஸ்ரீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார். இச் சம்பவத்தில் 36 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளார்கள். ருவிட்டர் தவிர்த்து, ஏனைய சமூக வலைத் தளங்களின் பாவனை தற்போது வரை இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை அறிந்து கொள்ள நமது புரட்சி வானொலியுடன் இணைந்திருங்கள்!! ”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”