” பேய் என்னை இருக்க விடவில்லை, பேயின் தொல்லையால் சாகிறேன்” நர்ஸிங் காலேஜ் மாணவியின் பகீர் கடிதமும் மரணமும்..! அதிர்ச்சியில் பெற்றோர்..!!
பேய்க்கு பயந்து தற்கொலை செய்வதாக பெண் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திண்டுக்கல் மருத்துவ கல்லூரியில் நர்ஸிங் 2ம் ஆண்டில் கல்வி கற்று வந்தவர் லத்திகா. சாதாரண குடும்பத்தில் பிறந்த லத்திகா தனது தம்பி தங்கையை நல்ல நிலையில் வைத்து பார்க்க வேண்டும் என தன் உழைப்பில் குடும்பத்தை பார்க்க வேண்டும் என கூறி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது பிறந்த நாளை கொண்டாடிய லத்திகா பிறந்த கொண்டாடிய நாளில் இருந்து பயந்த போல் இருந்த நிலையில் நேற்றைய தினம் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். லத்திகாவின் இறுதி கடிதத்தில்…அம்மா அப்பா என்னை மன்னித்து விடுங்கள்.
பிறந்த நாள் கொண்டாடிய பின் ஏதோ ஒன்று என்னை பின் தொடர்ந்து வந்ததை உணர்ந்தேன். அதன் பின் என்னை அது உறங்க விடவில்லை.அப்பா நைட்டு தூக்கம் இல்லை. என்ன சாக வானு கூப்பிடுறாங்க. என்னை தற்கொலை செய்து கொள்ள கூறியது. நான் மறுத்தேன், உங்களிடம் சொல்ல முயன்றேன், சொன்னால் குடும்பத்தை அழித்து விடுவதாக கூறியது. தம்பி தங்கையை கொலை செய்வதாக மிரட்டியது.
எனக்கு நீங்கள் எப்போதும் முக்கியம், அதனால் நானே தற்கொலை செய்து கொள்கிறேன் என குறிப்பிட்டதுடன், எங்கள் குடும்பத்தினர் மீது ஏதோ ஏவல் ஏவி உள்ளனர். அதனை எப்படியாவது அழித்து விடுங்கள் என குறிப்பிட்டுள்ளார். அறிவியல் வளர்ந்த பின் நர்ஸிங் படித்து வரும் பெண் இது போன்ற முடிவு எடுத்தது அதிர்ச்சியளித்துள்ள நிலையில் கடிதம் பற்றிய உண்மை தன்மை மற்றும் பெண் கூறியதில் இருக்கும் உண்மை தன்மை தொடர்பாக பொலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்..