லாவண்யா மரணத்தில் திடீர் திருப்பம்..! மனைவியுடன் இருந்த படி வேறு பெண்ணுடன் ஆபாச உரையாடல்..!
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியாவில் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது தற்கொலைக்கான காரணம் தனது கணவர் மற்றும் அவரது தாயாரும் தான் என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட லாவண்யாவின் கணவர் வெங்கடேஷ்வர ராவ் தொடர்பான பல விடயங்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
லாவண்யா மற்றும் வெங்கடேஷ் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து பெற்றோரின் விருப்பத்துடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். லாவண்யாவின் பெற்றோர் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் முடித்து சில மாதங்களில் பிரச்சனை ஆரம்பித்தது.
குழந்தை இல்லை என தினமும் சண்டை பிடித்து வந்த வெங்கடேஷ் மோசமாக லாவண்யாவை அடித்து உதைக்கும் காட்சிகள் அண்மையில் இணையத்திலும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் லாவண்யாவின் தற்கொலையில் புதிய திருப்பமாக அவரது டயரி கிடைத்துள்ளது.
அதில் கணவர் வீட்டிற்கு வந்து சில மாதங்கள் மட்டுமே மகிழ்ச்சியாக இருந்ததாக எழுதியுள்ள லாவண்யா குழந்தை இல்லை என்பது மட்டும் வெங்கடேஷின் பிரச்சனை இல்லை.வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த வெங்கடேஷ் குறித்த பெண்ணுடன் தினமும் வீடியோ காலில் பேசி வந்துள்ளார்.
லாவண்யாவுடன் ஒரே அறையில் இருந்தபடி குறித்த பெண்ணுடன் வீடியோ காலில் ஆபாசமாக பேசியுள்ளார். இவற்றை பார்த்துக் கொண்டிருக்க முடியாமல் கேட்டால் அடி உதை தான். அம்மாவிடமும் சொல்ல முடியவில்லை காதலித்து திருமணம் செய்து விட்டேனே என எழுதியுள்ளார். இந்த நிலையில் வெங்கடேஷை பொலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்..!!