மூட்டு மூட்டாக குத்துவலி உயிர் போகிறதா.!? இதோ இலகுவான இயற்கை தீர்வு..!!
இன்றைய காலத்தில் முதுகு வலி, மூட்டு வலி, போன்றவை சாதாரணமாக வருகிறது. இதற்கு காரணம் எமது உணவு முறைகள் ஒரு பக்கம் இருந்தாலும் கடினமான வேலைகள், நாற்காலியில் இருந்தபடியே வேலை செய்வது, வயதானவர்கள் இப்படி எல்லோருக்குமே இந்த கஷ்டம் இருந்துகொண்டே இருக்கும்.இன்று இதற்கான தீர்வை தான் பார்க்கப் போகிறோம். முதலில் தேவையான பொருட்களை பார்க்கலாம்:
வெந்தயம் 30 கிராம், சீரகம் 10 கிராம், மிளகு 10 கிராம், மஞ்சள் சிறிதளவு சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.இதனை கண்ணாடி போத்தல் ஒன்றில் போட்டு சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போது இதனை பயன்படுத்தும் முறையை பார்க்கலாம்.
மிதமான சுடு நீர் ஒரு கப் எடுத்து அதில் கால் கரண்டி பொடியை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.அதே போல் இரவு உறங்கச் செல்வதற்கு முன்பும் இதே போல் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து ஒரு வாரம் குடித்து வந்தால் போதுமானது.
மூட்டு வலி, முதுகு வலி உட்பட அனைத்துமே குறைந்துவிடும்.இந்த பானம் 12 வயதுக்குற்பட்டவர்கள் குடிக்க வேண்டாம்,அதே போல் கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் பெண்கள் குடிக்க வேண்டாம். இதனை குடிக்கும் அதே நேரம் இலகுவான உணவுகளை சாப்பிடுங்கள். இறைச்சி வகைகளை குறைத்துக் கொள்வது சிறந்தது..!!