எலுமிச்சை சாற்றில் இதை மட்டும் கலந்து குடியுங்கள். ! உடலில் உள்ள நச்சுக்கள் உடனடியாக வெளியேறிவிடும்..!!
வீட்டில் இலகுவான மருத்துவங்கள் பல இருந்தாலும் நாம் அவற்றை பயன் படுத்துவதில்லை. காரணம் இயற்கை மருத்துவத்தின் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் இயற்கை மருத்துவம் தான் இன்றளவும் உதவிக் கொண்டிருக்கின்றது. இன்று நாம் பார்க்கப் போவது வீட்டிலேயே இருக்கும் சில மருத்துவ பொருட்களும் பயன்படுத்தும் முறைகளும் தான்.
குறிப்பாக எலுமிச்சை சாறு. எலுமிச்சை வீட்டில் இருந்தாலே போதும் ஏராளமான நோய்களுக்கு தீர்வு கிடைத்து விடும். உடல் எடை அதிகம் உள்ளவர்கள் காலையில் சுடு நீரில் பாதி எலுமிச்சை பழத்த்தின் சாறை விட்டு குடித்து வர உடல் எடை குறையும்.
எலுமிச்சை சாற்றில் மஞ்சள் சிறிதளவு போட்டு மிக்ஸ் செய்து குடித்து வர கொழுப்பு கரைவதுடன் வயிற்றில் உள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும். அதே போல் எழுமிச்சை சாற்றில் சிறிது இஞ்சி சாறு, தேன் கலந்து குடித்தால் சளி, தொண்டை வலி, இருமல் போன்றவற்றை குணமாகும்.
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு, சிறிது மிளகு தூள் சேர்த்து குடித்து வர காலையில் ஏற்படும் பித்த மயக்கம் வாந்தி போன்றவை நீங்கி விடும். அதிக நேரம் வெயிலில் நிற்பவர்கள், அதிக நேரம் நடப்பவர்கள் எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வரலாம் இதனால் உற்சாகமாக இருக்கலாம்..!