இலங்கை பெண் லொஸ்லியாவின் தந்தைக்கு இந்திய தமிழ் திரையுலகில் குவியும் வரவேற்பு..! ஒரே நாளில் சாதித்து காட்டிய தமிழன்..!
தற்போது பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பேசப் பட்டுக் கொண்டிருப்பவர் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன். ஒரு சிலர் லொஸ்லியாவை இத்தனை மக்கள் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கண்டித்தது தவறு என பதிவிட்டு வரும் நிலையில் ..
பலர் மரியநேசன் அவர்கள் செய்தது தான் சரி பெண் குழந்தைகளை பெற்ற தந்தையர்கள் இப்படி தான் நடந்துகொள்வார்கள் என கூறி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்தை வெளியிட்டு வருகின்றனர்,
அதில் இயக்குனர் வசந்த பாலன் அவர்கள் லொஸ்லியாவின் தந்தைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் ஆனால் பிரபல பாடலாசிரியர் அருண் பாரதியின் மனைவியான எழுத்தாளர் பத்மாவதி தனது ஆதரவு லொஸ்லியாவின் தந்தைக்கு என கூறியுள்ளார்.
லாஸ்லியாவின் தந்தையை போல எத்தனையோ தந்தைகள் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கிறார்கள் ..மகளை பெற்ற அப்ப களால் மட்டுமே இதை உணர முடியும்… pic.twitter.com/IGrf47eCug
— WriterVPadmavathy (@padmavathyvae) September 12, 2019
அவர் மட்டும் இன்றி யூடியூப் பிரபலமான பிரஷாந்த் ராமசாமி அவர்களும் தனது ஆதரவை தெரிவித்துள்ளனர். அதே போல் நடிகை சித்ரா, நடிகர் தாடி பாலாஜி ஆகியோர் லொஸ்லியாவின் தந்தைக்கு தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்..!
" எண்ட பிள்ளையை நான் காசுக்கு இங்கே விடல, பிச்சை எடுத்தாவது பிழைச்சிக்குவோம், மானம் போக கூடாது, கெத்தா இருக்கணும்!! " – லாஸ்லியாவின் தந்தை .
உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு தமிழ் தந்தையின் மனநிலை. வாழ்க பல்லாண்டு சார் ! #BiggBossTamil3
— Prashanth Rangaswamy (@itisprashanth) September 11, 2019