தந்தையின் மரணத்திற்காக இலங்கை வந்துள்ள லொஸ்லியா.! வைரலாகும் பதிவு இதோ.!!
பிக் பாஸ் நிகழ்ச்சியினால் புகழின் உச்சத்திற்கு சென்றவர் லொஸ்லியா. இலங்கையில் இருந்து சென்னை வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்டார். அண்மையில் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடாவில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
இவரது மரணம் இயற்கை மரணம் என கனடா அரசு மருத்துவ சான்றிதழ் கொடுத்த நிலையில் மரிய நேசன் அவர்களின் உடலை இலங்கை கொண்டுசெல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் இதுவரையில் இந்தியாவில் இருந்த லொஸ்லியா நேற்றைய தினம் இலங்கை சென்றுள்ளார்.
தந்தையின் மரணத்திற்காக தாய் சகோதரிகளுக்கு ஆறுதல் கூற இலங்கை சென்றபோதும் யாரையும் சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை சட்டத்தின் படி 14 நாட்கள் தனிமை படுத்தப் பட்டுள்ள லொஸ்லியாவிற்கு தந்தையின் சடலத்தை பார்க்க முடியுமா என்பது சந்தேகமே.
இருப்பினும் சடலம் 14 நாட்களுக்குள் வராவிட்டால் பார்க்கலாம் என்று கூறப்படுகின்றது. எதுவாகினும் லொஸ்லியாவின் குடும்பத்தினர் தைரியமாக இருக்க வேண்டிய நேரமிது.!!
#Losliya இலங்கை வந்துவிட்டார். அவர் 14 நாட்கள் இலங்கை தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கிணங்க தனிமைப்படுத்தலில் இருந்து பின் தன் குடும்பத்தை சந்திப்பார். தகவல்களை கேட்டறிந்து கொள்ளும் அனைத்து சொந்தங்களுக்கும் நன்றி. #Losliya #LosliyaArmy #KavinArmy @ikamalhaasan @vijaytelevision
— Fazlullah Mubarak (@FazlullahMTV) November 22, 2020
லொஸ்லியாவின் தாயுடன் சற்றுமுன் கதைத்தேன். அவர்கள் ஆழ்ந்த துயரத்தில் இருக்கிறார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் லொஸ்லியா இலங்கை வருவார் என்று அவர்கள் தெரிவித்தார்கள்.பிரார்த்திப்போம் #Losliya #LosliyaArmy #KavinArmy @ikamalhaasan @iamSandy_Off @AbhiramiVenkat3 @vijaytelevision
— Fazlullah Mubarak (@FazlullahMTV) November 18, 2020