லொஸ்லியாவின் தந்தை மரியநேசனின் அருகில் இருந்த கடிதம் மற்றும் லாப்டாப்.!! சற்று முன் வெளியாகிய வீடியோ.!!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி இன்று பல திரைப்படங்களை கைவசம் வைத்திருப்பவர் நடிகை லொஸ்லியா. நான்கு பெண் பிள்ளைகளில் இரண்டாவது பெண் பிள்ளையாக பிறந்த லொஸ்லியா தான் குடும்பத்தின் ஆணி வேர் என்று சொல்லலாம், லொஸ்லியாவின் அக்கா பிரியங்கா தற்கொலை செய்துகொண்ட நிலையில் தந்தை மரியநேசன் கனடாவில் பணி புரிந்து குடும்பத்தினரை கவனித்து வந்தார்..
இந்த நிலையில் நேற்றைய தினம் மாரடைப்பால் திடீர் மரணமடைந்துள்ளார். தந்தை மீது அதிக அன்பு வைத்திருந்த லொஸ்லியா நிச்சயம் தந்தையின் இழப்பை தாங்கிக் கொள்ள மாட்டார் என்பது நாம் அறிந்தது தான். இன்றைய தினம் வனிதா விஜயகுமார் லொஸ்லியாவிற்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.
லொஸ்லியா ஒரு வார்த்தை கூட பேசாமல் கதறி அழுத சத்தம் மட்டுமே கேட்டுள்ளது, இதனை வனிதா அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன், அவளது கதறல் தாங்க முடியவில்லை, கடவுளே அவளுக்கு தைரியத்தை கொடு என பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் படுக்கையில் இருந்தபடியே இறந்துள்ளார்.
அருகில் கடிதம் ஒன்றும் லாப் டாப்பும் உள்ளது. மரணத்தை அறியாத மரிய நேசன் வழமை போல் பணிக்கு சென்று திரும்பிய பின்னரே மரணமடைந்துள்ளார். தந்தையின் மரணத்தில் சந்தேகம் இல்லை என லொஸ்லியா கூறியதை தொடர்ந்து சடலம் இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.!!