இன்று பிக் பாஸ் வீட்டில் தர்ஷன் மற்றும் கவின் இருவரும் வருவார்கள் என்று நேற்றே கூறி இருந்த நிலையில் இன்று இருவருமே வந்தார்கள். இதனால் பிக் பாஸ் வீடு கலை கட்டியுள்ளது. இன்றுடன் வாக்கு பதிவுகள் நிறைவடைந்துவிடும், நாளைக்கு வாக்களிக்க முடியாது.
தற்போதைய வாக்கு நிலவரப் படி லொஸ்லியா முதலிடத்திலும் முகென் இரண்டாம் இடத்திலும் சாண்டி மூன்றாம் இடத்திலும் செரின் 4ம் இடத்திலும் உள்ளனர். ஆனால் இன்று இரவு 12 மணி வரை வாக்களிக்க முடியும் என்பதை மனதில் வைத்து ரசிகர்கள் வாக்களித்து வருகின்றனர்.
எது எப்படி போனாலும் வெற்றியாளர் விஜய் டிவி சொல்பவர் தான்.! இந்த நிலையில் இன்றைய தினம் என்று லொஸ்லியாவின் தந்தை வீடியோ கால் மூலம் மீண்டும் வீட்டுற்குள் வந்துள்ளார். ஏற்கனவே நேரடியாக வந்து மிரட்டிய லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் அவர்கள் வீடியோ காலில் மகளுடன் பேசும் போது நீ இப்படியே இரு இது நன்றாக இருக்கிறது என கூறுகிறார்,
அதற்கு லொஸ்லியா சாரி அப்பா மன்னித்து விடுங்கள், இங்கு என்ன நடக்கிறது என்பதை வெளியே வந்து சொல்கிறேன் என்கிறார். வழமை போல் தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே என நா முத்துக்குமார் அவர்கள் கண்முன் வந்து செல்ல லொஸ்லியா அழுகிறார். மீண்டும் வீட்டிற்குள் மரியநேசன் அவர்களின் வரவு இம்முறை அமைதியாக இருந்தது..!!