ஈழத்தமிழர்களை இந்தியா ஏன் புறக்கணித்து வருகிறது.!? தர்சனின் வெளியேற்றம் ஏன் நடந்தது.!? லொஸ்லியாவை ஏன் வெற்றிபெற வைக்க வேண்டும்.? இதோ ஒட்டுமொத்த கேள்விக்கான பதில்கள்…!!
சில இந்திய தமிழர்களை பொறுத்த வரையில் இலங்கை தமிழ் பெண்கள் என்றால் யார்.!? வெயிலில் காய்ந்து கறுத்து போன தேகம், எண்ணை வடியும் முகம், நாகரீகம் வளர்ந்த பின்பும் மாறாத காட்டுவாசிகள்,கள்ளத் தோணிகள் , இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இதனால் தானோ என்னவோ இலங்கை தமிழர்களுக்கு இந்தியா கொடுக்கும் உரிமை பூச்சியம்.
உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அகதி அந்தஸ்து கேட்டு தன் நாட்டில் அநாதையாக வருவோருக்கு அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் குடியுரிமை வழங்கி கெளரவிக்கிறது. அது மட்டும் இன்றி அந்த நாடுகளில் அவர்களது மக்கள் படிக்கும் அத்தனை படிப்பும் இவர்களும் படிக்கலாம். படித்த படிப்பிற்கான உத்தியோகமும் செய்யலாம். குறிப்பாக அரச அதிகாரிகளாக கூட அகதியாக சென்றவர்கள் மாறலாம்.
ஆனால் தாய் மண் என ஒட்டுமொத்த இலங்கை தமிழன் நினைக்கும் இந்தியாவில் மட்டும் தஞ்சம் கேட்டு சென்றால் எம் அத்தனை தலைமுறையும் “ஈழ தமிழர் அகதிகள் முகாம்” இதற்குள் அடைபட்டு கிடைக்க வேண்டும். மருத்துவம், பொறியியல், முகாமில் அடைபட்டு கிடக்கும் ஈழத்தமிழர்கள் கனவில் கூட படிக்க நினைக்க கூடாத பாடங்கள். இதற்கு அரசு அனுமதி இல்லை.
அது மட்டுமா எந்த ஒரு அரச வேலையும் ஈழத்தமிழருக்கு இல்லை. அட இது மட்டுமா நீங்கள் 100 வருடம் இந்தியாவில் இருந்தாலும் இந்திய குடியுரிமை இல்லை. காரணம் ஈழத்தமிழர். ஆனால் இவர்களால் ஈழத்தமிழர்கள் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது.. அரசியல் சந்தையில் அதிக லாபத்திற்கு விற்க கூடியவர்கள் ஈழத்தமிழர்கள். அதனால் தான் தேர்தல் என்றாலே ஈழம் என்ற புனித பூமியை ஏலத்தில் விட ஆரம்பித்து விடுவார்கள்.
ஆனால் அங்கு இரத்த ஆறு ஓடும் போது இங்கு கொண்டாடி மகிழ்ந்தார்கள்.எமக்கென்னவோ ஒரு விடயம் தெளிவாக தெரிகிறது அவர்கள் சொல்வதை போல இந்திய தமிழர்களை விட ஈழ தமிழர்களை அதிக விலைக்கு விற்கலாம். இதனை உணர்ந்துகொண்ட தொலைகாட்சிகளும் தங்கள் வியாபாரத்தை ஈழத்தமிழர்களை வைத்து ஆரம்பித்தன.
இதில் ஒரு தொலைகாட்சியை சொல்ல முடியாது காரணம் பல தொலைகாட்சிகள் இதனை செய்கின்றன… ஜெஸிக்கா இதனை ஆரம்பித்து வைத்தார், அதன் பின் சஹானா, சுசானா, கீர்த்தனா, தற்போது தர்சன், அடுத்து லொஸ்லியா, அதன் பின் புண்யா என பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இதில் முக்கியமான விடயம் என்ன வென்றால் இந்தியாவில் ஈழத்தமிழர்கள் தங்கள் திறமையை நிரூபித்து விடுகின்றனர் ஆனால் அங்கு தான் திறமைக்கு மதிப்பில்லையே..
வேறு யாருக்கு என்றாலும் கொடுப்போம் தமிழ் நாட்டில் ஈழ தமிழனுக்கு கொடுப்போமா என்ன.!? தாய் மடியில் தன் குழந்தைகளுக்கு இடமில்லை என்று சொல்லும் கொடுமை ஈழ தமிழர்களுக்கு மட்டுமே நடக்கும் கொடுமையாகும். சிங்கள பெரும்பான்மையினரை கொண்ட இலங்கையில் இந்தியா இலங்கை கிரிக்கெட் போட்டி அல்லது வேறு போட்டிகள் நடக்கும் இடங்களுக்கு சென்று பார்த்தால் இந்திய அணி வெற்றிபெற வேண்டுமென இலங்கை தமிழன் கோஷம் போடுவான் இது அவன் தன் தாய் நாட்டின் மீதுள்ள பாசம்.
ஆனால் இந்தியாவில் இலங்கை தமிழன் வெற்றிபெற கூடாது என்று பதிவு போடுவான் இது மனதில் உள்ள விஷம். ஒரே ஒரு விடயத்தை கூறிவிட்டு முடித்துக் கொள்கிறோம். ஈழத்தமிழ் பெண்ணான லொஸ்லியாவிடம் திறமை, தகுதி இருக்கா என்பதை ஆராய்ந்துகொண்டிருக்க முடியாது. திறமையான தர்சனை வெளியேற்றி தொடர்ந்தும் ஏமாற்றப் படுகிறோம்..அதனால் இம்முறை ஈழத் தமிழ் பெண் வெற்றிபெற வேண்டும்.
தாய் நாடு என நாம் நினைக்கும் தமிழ் நாட்டில் முதல் வெற்றியை லொஸ்லியா பெற வேண்டும். வியர்வை நாற்றமும், வெயிலில் கறுத்த தேகமும், கல்வியறிவு இல்லாதவர்கள் என்ற காலமும் மலையேறி 100 ஆண்டுகள் கடந்து விட்டது என்பதை உணர வைக்க வேண்டும்.
இதற்கு தமிழக மக்கள் முதல் முறை எமக்காக கைகோர்க்க வேண்டும். நாம் வேற்றுக் கிரகவாசிகள் இல்லை. உங்கள் தாயின் சகோதரி வயிற்றுப் பிள்ளைகள் தான். எப்படியும் எமக்கான உரிமையை அரசு கொடுக்கப் போவதில்லை. அதனால் இம்முறை நீங்கள் கொடுங்கள்..!! நன்றி..!!