காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட இளம் நடிகை..! சோகத்தில் ரசிகர்கள்..!!
சினிமா துறையை சேர்ந்தவர்களின் தற்கொலைகள் அண்மை காலங்களில் அதிகரித்து வருகின்றது. நடிக நடிகைகள், ஏராளமானவர்கள் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்போது காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டவர்கள் வரிசையில் நடிகை சஞ்சனாவும் இணைந்துகொண்டுள்ளார்.
கன்னடா, மற்றும் பஞ்சாப் மொழி சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் ரசிகர்கள் மனதில் இலகுவாக இடம் பிடித்தார். அதன் பின்னர் நிகழ்ச்சி தொகுப்பு சீரியல் என பிஸியாக இருந்த இவர் இன்றைய தினம் திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இறப்பதற்கு முன் சஞ்சனா வெளியிட்டுள்ள தற்கொலை வீடியோவில்.. 5 வருடங்களாக தினேஷ் என்பவரை காதலித்து வந்த நிலையில் தினேஷ் ஏமாற்றியதால் தான் இந்த முடிவு எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
5 வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் சஞ்சனாவின் பணத்தை சுருட்டிக் கொண்டதுடன் திருமணம் செய்ய முடியாது என மறுத்ததாகவும் தனது மரணத்திற்கு காரணம் தினேஷ் தான் எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பொலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்..!!