பிக் பாஸ் வீட்டில் கொடூரமான முறையில் கையை அறுத்துக் கொண்ட மதுமிதா..! முதல் முதல் காயத்தை மக்களுக்கு காட்டிய புகைப்படம்..! இவ்வளவு பெரிய காயமா.!?
பிக் பாஸ் வீட்டில் இருந்து கையை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்தவர் நடிகை மதுமிதா. மதுமிதா வீட்டிற்குள் சென்றதில் இருந்தே அடிக்கடி பிரச்சனைகளில் சிக்கி வந்தார். அபிராமி மற்றும் வனிதாவுடன் தமிழ் பெண் இப்படி ஆடை அணியக் கூடாது என கூறி மிகப் பெரிய பிரச்சனை வெடித்தது,
அதில் போட்டியாளர்கள் மதுமிதாவை வெறுத்தாலும் வெளியே அவருக்கான ஆதரவு அதிகரித்தது. மதுமிதா பைனலுக்கு செல்வார் என பலரும் எதிர் பார்த்திருக்க வனிதா மீண்டும் வீட்டிற்குள் சென்றார். அங்கு சென்றவர் அபிராமியை தூண்டிவிட்டு முகெனுடன் சண்டை போட வைத்தார்,
அதே போல் மதுமிதாவையும் தூண்டி விட வனிதாவின் சூழ்ச்சி தெரியாமல் மதுமிதாவும் மாட்டிக் கொண்டார். இந்த நிலையில் மதுமிதா மற்றும் செரினுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனையால் கடுப்பான மதுமிதா தனது கைகளை அறுத்துக் கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதி மீறல் என்பதால் உடனடியாக பிக் பாஸ் வீட்டை விட்டு மதுமிதா வெளியேற்றப் பட்டார்.
நீண்ட நாட்களாக பேட்டி கொடுக்காமல் இருந்து வந்த மதுமிதா தற்போது பேட்டி கொடுத்து வருகிறார். அத்துடன் தான் வெட்டிக் கொண்ட தனது கையின் காயங்களை மக்களுக்கு காட்டியுள்ளார். அதில் மதுமிதா பலமுறை கைகளை வெட்டிக் கொண்டுள்ளது தெளிவாக தெரிகிறது..!!