பொலீஸ் வரை செல்லும் மதுமிதா தற்கொலை முயற்சி ..! இதோ ஆதாரம்..!!!
பிக் பாஸ் வீட்டில் இருந்து தற்கொலை முயற்சி செய்ததாக கூறி மதுமிதாவை வெளியேற்றினாலும் இதில் வேற அர்த்தமும் இருப்பதாக பலர் கூறிவருகின்றனர். குறிப்பாக இதனை மதுமிதா ஏதேனும் ஒன்றை மனதில் வைத்து அதாவது பிக் பாஸ் வீட்டில் நிலைத்து நிற்க ஏதேனும் புது யுக்தியை யோசித்து பின்பு அதில் தோல்வியுற்றதால் தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கலாம்.
அல்லது கடந்த வாரம் அவர் செய்த தவறுகளுக்கு வீட்டில் இருக்க முடியாது என மது இந்த தற்கொலை முயற்சி செய்திருக்கலாம். இது இப்படி இருக்க மது தற்கொலை முயற்சி சம்மந்தமாக பலரும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். அதில் நடிகரும் அரசியல் வாதியுமான எஸ் வி சேகர் டுவிட்டரில் இட்ட பதிவு அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது.
” மதுமிதா பிக் பாஸ் வீட்டிற்குள் தற்கொலை முயற்சி செய்தார் என தெரிவித்த நீங்கள் ஏன் பொலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக பொலீஸில் புகார் கூட கொடுக்கவில்லை. மதுமிதா தவறு என்றால் அவரை அந்த தவறை செய்ய தூண்டியவர்களை கண்டு பிடித்து தண்டனை வாங்கிக் கொடுங்கள்.”
பிக் பாஸ் வீட்டில் 60 கேமராக்கள் இருக்கும் நிலையில் இதில் ஒன்றில் கூடவா மதுவை தற்கொலை செய்துகொள்ள தூண்டியவர் யாரென கண்டு பிடிக்க முடியவில்லை.? என கேள்வி எழுப்பியுள்ளார்..
அவரது பதிவு இதோ..!!
#BiggBossTamil #TNDGP #TNCMO மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தது தவறு என கூறி அவரை வெளியே அனுப்பியவர்களுக்கு, மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர் யார் என கண்டுபிடித்து வெளியே அனுப்ப முடியாதா⁉️ஏன் 60 காமிரால சில வேலை செய்யவில்லையா. இது விளையாட்டுத்தான் என்றாலும் போலீஸ் விசாரணை தேவை.
— S.VE.SHEKHER?? (@SVESHEKHER) August 18, 2019