மனைவி மற்றும் குழந்தையின் முன் நடிகர் ஈஸ்வரை கட்டிப் பிடித்து மஹாலட்சுமி செய்த செயல்..! திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!!
தற்போது அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விடயம் ஜயஸ்ரீ ஈஸ்வரின் திருமண முறிவு தான். சீரியல் நடிகையாக கலக்கியவர் நடிகை ஜயஸ்ரீ. அப்போது வாய்ப்பு தேடி சிறு சிறு வேடங்களில் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த ஈஸ்வரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ஈஸ்வரோ ஏராளமான கடன் வைத்திருந்த நிலையில் ஜயஸ்ரீ அனைத்து நகைகள் மற்றும் அவர் சேர்ந்து வைத்திருந்த பணம் போன்றவற்றை கட்டி கடனில் இருந்து மீண்டு வந்தனர். அதன் பின் சந்தோசமாக வாழ்க்கையை ஆரம்பித்த ஈஸ்வருக்கு “தேவதையை கண்டேன்” சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் தான் சர்ச்சை எழுந்தது.
குறித்த சீரியலில் வில்லியாக நடித்த வி.ஜே மஹாலட்சுமி ஈஸ்வருடன் நெருங்கி பழகிய நிலையில் இருவரும் நெருக்கமாக டிக் டாக் செய்வது ஊர் சுற்றுவது என இருந்துள்ளனர். ஜயஸ்ரீயிடம் இருந்த மீதி பணம் நகை எல்லாவற்றையும் மஹாலட்சுமிக்கு கொடுத்த ஈஸ்வர் ஜயஸ்ரீயை விவாகரத்து தரும் படி கேட்டுள்ளார்.
மறுத்ததால் அடித்து உதைத்ததுடன் குழந்தையையும் அடித்து உதைத்துள்ளார். அதன் பின் ஜயஸ்ரீ பொலீஸில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து ஜயஸ்ரீ கூறுகையில் பிரபல ஹோட்டல் ஒன்றில் இருவரும் இருப்பதாக சீரியலில் அவருடன் நடித்த ஒருவர் கூறினார்.
குழந்தையுடன் அங்கு சென்ற நான் இருவருடனும் சண்டை போட்டேன் ஆனால் வி.ஜே மஹாலட்சுமி என் குழந்தையின் கண்முன்னால் அவரை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்ததுடன் ஐ. லவ் யூ ஈஸ்வர் என கூறினார். மனசாட்சி என்பது இல்லாதவர் தான் இந்த மஹாலட்சுமி.. என் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிவிட்டார் என தெரிவித்துள்ளார்..!!