புகையிரத நிலையத்தில் வைத்து 4 வயதுடைய மகளை தரையில் மோதியடித்த கொடூர தந்தை…!!!
சுவிட்சர்லாந்தில் உள்ள Brugg புகையிரத நிலையம் ஒன்றில் வைத்து தம்பதியினருக்கு இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. மனைவி மீது இருந்த கோபத்தால் 04 வயதுடைய மகளை தரையில் மோதியடித்தார். அந்த குழந்தையை பல தடைவை தரையில் மோதியடித்ததில் அவளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அடிபட்ட அந்த சிறுமி இரத்த வாந்தியெடுத்ததோடு சுய நினைவை இழந்துள்ளது. அந்த புகையிரத நிலையத்தில் இருந்தவர்கள் குறித்த சிறுமியை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். பின்னர் பொலிஸார் அந்த குழந்தையின் தந்தையை கைது செய்தார்.
அவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை விசாரணைக்கு முன்பாகவே சிறையில் அடைக்க வேண்டும் என விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார். பின்னர் அவரை சிறையில் அடைக்கப்பட்டது. அவர் தனது மகளை பத்து நாட்களுக்கு சந்திக்க கூடாது என பொலிசார் தடை விதித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்ற நிலையில் தற்போது அந்த சிறுமி அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக தெரிவித்துள்ளனர்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.