எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச, நாமல் உட்பட 60 பேரின் உறுப்புரிமையை ரத்து செய்ய தீர்மானம்..!!
இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதனை தொடர்ந்து அவரும் அவரின் புதல்வர்கள் உட்பட 60 பேரின் உறுப்புரிமையை ரத்து செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
!Advert!
கட்சி உறுப்புரிமையை ரத்து செய்வதற்கான பெயர் பட்டியல் மற்றும் அவர்களுக்கு பதிலாக தேசிய பட்டியல் ஊடாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான விபரங்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பெயர் பட்டியல்களும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீரவினால் தேர்தல்கள் ஆணையாளரிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள 95 சுதந்திர கட்சி உறுப்பினர்களில் 60 பேர் பொதுஜன பெரமுனவிற்கு மாறியுள்ளனர்.
!Advert!
ஒருவர் வேறு கட்சியில் உறுப்புரிமை பெற்றால் தற்போது இருக்கும் கட்சியின்உறுப்புரிமையில் இருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதற்கு அந்த கட்சிக்கு அனுமதியுள்ளதுடன், அவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையையும் ரத்து செய்வதற்கு சந்தர்ப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.