முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதிய சரித்திரம்…!!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினராகவும், மற்ற கட்சியின் தலைவராகவும் செயற்படுவதன் மூலம் புதிய சரித்திரம் படைத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் என்று கடிதம் ஒற்றை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியதன் ஊடாக மஹிந்த ராஜபக்ச எதிர்கட்சி தலைவர் பதவி வகித்து வருகின்றார்.
!Advert!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 2017 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கினார். அதே வருடத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சூழ்ச்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. அந்த முயற்சி தோல்வியடைந்த பின்னர் மஹிந்த இவ்வாறான ஒரு கடிதம் வழங்கி எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
!Advert!
நாட்டின் தற்போதைய சூழ்நிலையால் மஹிந்தவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் ஆபத்தான நிலை காணப்படுகின்றது. ஒரு கட்சியின் உறுப்பினர் மற்றொரு கட்சியில் உறுப்புரிமை பெற்றுக்கொண்டால் அவரின் அனைத்து பதவி பறி போகும் என்பது நடைமுறையில் உள்ளது. இது போன்ற நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மஹிந்த இழந்தால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் மஹிந்த இழக்க வேண்டி வரும் என குறிப்பிட்டுள்ளார்.
!Advert!
மகிந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகிப்பதற்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஆர்.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்டார் என்று தெரிவித்துள்ளனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.