வாய் பேச முடியாத இளம் பெண்ணை கதறக்கதற பாலியல் பலாத்காரம் செய்த மூன்று காமக் கொடூரர்கள்..!!
இன்றைய கால கட்டத்தில் பெண்களுக்கு எதிராக வன்புணர்வுகள் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையிலேயே கடந்த 8 ஆம் திகதி மலேசியாவில் ஜாலான் கலும்பாங் அருகே உள்ள குடில் ஒன்றில் 18 வயதுடைய வாய் பேச முடியாத இளம் பெண் ஒருவர் மூன்று பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டர்.
அவ் இளம் பெண் வீட்டில் இல்லாததால் அவரின் தந்தை அவரை காணவில்லை என்று தேடியுள்ளார். அப்போது அவரது வீட்டில் இருந்து 20 மீட்டர் தூரத்தில் ஒரு இடத்தில் இருந்து அப் பெண் அழுது கொண்டிருப்பதை கண்டு என்ன நடந்தது என்று கேட்டார். அவ் இளம் பெண் மீண்டும் கதறிக்கதறி அழுதார். தந்தை என்ன நடந்தது என்று மீண்டும் கேட்க செய்கை மொழி மூலம் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்கள் என்று தந்தையிடம் கூறினார்.
தனது மகள் கூறியதை கேட்டு ஆத்திரமடைந்த தந்தை அந்த குடிலுக்குள் சென்று பார்த்த போது அங்கு 14 முதல் 16 வயதிற்கு உட்பட்ட 4 சிறுவர்கள் இருப்பதை கண்டார். மேலும் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் காட்டிய மூவரையும் கைது செய்தனர்.
பின்பு அப் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்காக 7 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.