உலகில் மலேரியா நோயை முழுமையாக ஒழித்துக்கட்டத் திட்டம்…!!!
உலகில் மலேரியா நோயை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்ட முடியும் என்ற புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மனித இனத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் பழைமையான ஆபத்தான நோய் மலேரியாகும்.
உலகில் வருடம் தோறும் 200 மில்லியனுக்கும் அதிகமான மலேரியாச் சம்பவங்கள் பதிவாகின்றன. அதிகளவாக குழந்தைகளே இவ்நோயில் பாதிக்கின்றனர். மலேரியாவை முழுமையாக ஒழிப்பது நிறைவேற்ற முடியாத கனவல்ல என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் குறித்த நோயை முற்றாகத் அழிப்பதற்கு வருடங்களுக்கு இரண்டு பில்லியன் டொலர் நிதி தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்கா, செனகல், மொஸாம்பிக் ஆகிய இடங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு மலேரியா தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இதனால் அங்கு மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் சவால்கள் நீடித்து வருகின்றனர்.
இருப்பினும், தற்போது உள்ள நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, 2050 ஆம் வருடங்களுக்குள் மலேரியாவே இல்லாத புதிய உலகை உருவாக்க முடியும் என்று நம்பப்படுகின்றது .