மலேசியாவில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் சடலமாக மீட்பு..!!
மலேசியா தலைநகரிலிருந்து தெற்கே 70 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ரிசார்ட் பகுதியில் 15 வயதுடைய நோரா என்பவர் காணாமல் போயுள்ளார். இந்த சிறுமியின் உடல் 10 நாட்களுக்குப் பிறகு பிணமாக காட்டு ஓடையிலிருந்து மலேசிய பொலிஸாரால் மீட்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நோராவின் மரணத்திலுள்ள மர்மத்தை தெரிந்து கொள்வதற்காக இவரது உடலை வைத்தியசாலைக்கு எடுத்து சென்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளன. பின்னர் இவ் அறிக்கையில் நோரா நீண்டகாலமாக பசி மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதால், அவரது உடலுக்குள் ஏற்பட்ட இரத்தப்போக்கு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நோராவின் இறப்பு தொடர்பாக பொலிஸார் விசாரணையை மேற்கொண்ட போது அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை எனவும் குடல் பாதிக்கப்பட்டு தான் இறந்துள்ளார் எனவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் இவர் கடத்தப்பட்டதாக தற்போதைக்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என்றும் பொலிசார் குறிப்பிட்டனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.