மலேசியாவில் பெய்து வரும் பலத்த மழையால் 9,000-க்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை..!!
மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் 9,000-க்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. கரையோர நகரான மெர்சிங்கில் கடும் வெள்ளம் ஏற்பட்ட காரணத்தால் வீதி போக்குவரத்து தடைபட்டது. நேற்றைய தினம் பிற்பகல் முதல், நகரின் சில இடங்களில் வீதிகளில் போக்குவரத்துக்கு மூடப்பட்டன. அந்தப் பகுதிகளில் அவசரச் சேவை வாகனங்களையும் அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.
ஜொகூர் மாநிலத்தின் வடக்கு பகுதியான செகாமாட் (Segamat) முதல், தென் பகுதியான கோத்தா திங்கி (Kota Tinggi) வரை வெள்ள பாதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், சுமார் 90 தற்காலிக நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆகவே மோசமாக பாதிக்கப்பட்ட கோத்தா திங்கியில் மட்டும், 2,600க்கும் அதிகமான மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.