தாத்தா செய்த விளையாட்டால் பொலிஸார் அதிர்ச்சி!
மனிதர்கள் தமது நடவடிக்கைகளை இலகுவாக மாற்ற, பல சந்தர்ப்பங்களில் பல்வேறு குறுக்குவழிகளைக் கையாள்வர். அவர்களில் சிலர் பிடிபடாமல் சென்றுவிடுவர். அதேவேளை பிடிபட்டவர்கள் தண்டனையை அனுபவித்ததும் உண்டு.
இதேபோல்தான் அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் ஒரு வயதானவர் செய்த வேலை பொலிஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள சில மாகாணங்களில் சன நெரிசலைத் தவிர்க்க, நெடுஞ்சாலைகளில் தனி வழி இருக்கும். இதில், ஒருவர் செல்ல முடியாது. இருவர் அல்லது அதற்கு மேல் பயணிக்கும் கார்கள் மாத்திரமே செல்லமுடியும்.
மீறினால் தண்டனை உண்டு.
இந்நிலையில், 62 வயதான முதியவர் ஒருவர், குறித்த வழியால் தண்டனையின்றி தனியாக எப்படிச் செல்லலாம் என்று யோசித்துள்ளார்.
அதற்காக அவர், எலும்புக்கூடு ஒன்றை எடுத்து, அதற்கு தொப்பி ஒன்றை அணிவித்து தனது ஆசனத்துக்கு அருகே வைத்துக்கொண்டு பயணித்துள்ளார்.
ஆனால், பொலிஸாரின் கழுகுக் கண்கணில் அவர் சிக்கிவிட்டார். இதனால், அவரிடம் அபராதம் விதித்த பொலிஸார் அவரை இது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என்றும் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
முதியவரின் இந்தச் செயலால் அப்பகுதியில் பரபரப்புத் தொற்றியது.