கொரோனா பற்றிய தகவல்களை தேடாதீர்கள்…வீட்டில் இருக்கும் மக்களுக்கு உளவியலாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை…!!
கொரொனா வைரஸ் பற்றிய விடயங்களை அதிகம் தேட வேண்டாம் என உளவியலாளர்கள் தெரித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரொனா வைரஸின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் உளவியலாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் இது வரை 8 லட்சம் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப் பட்டுள்ள நிலையில் 37 ஆயிரத்திற்கு அதிகமானோர் மரணமடைந்துள்ளனர்.
அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், போன்ற நாடுகள் ஆபத்தின் விளிம்பில் இருகின்றன. இந்த நிலையில் மக்களை வீடுகளில் இருக்கும் படி நாடுகள் அனைத்தும் கூறி வருகின்றது. இந்த நிலையில் வீடுகளில் இருக்கும் மக்கள் கொரொனா வைரஸ் தொடர்பான செய்திகளை தேடி படிக்க வேண்டாம் என உளவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கான காரணம் வீட்டில் தனிமை படுத்தப் பட்டிருப்பவர்கள் கொரொனா பற்றி அதிகம் படிப்பால் மனதளவில் பாதிக்கப் படுகின்றனர். தொடர்ந்து அதைபற்றி சிந்திப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாவதாக செய்திகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் தற்கொலை முயற்சி வரை செல்லலாம் என்பதால் எந்த நேரமும் கொரோனா பற்றி படிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்..!!