மனைவி வேறு நபருடன் தொடர்பு…!! ஆத்திரம் அடைந்த கணவனின் கொடூர செயல்…!!!
ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவை சேர்ந்த சமீலு என்பவர் லொறி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் வேலை காரணமாக அடிக்கடி வெளியூருக்கு சென்று வந்தார். இந்த நிலையில் இவரது மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டார்.
இது தொடர்பாக சமீலுக்கும் அவர் மனைவிக்கும் சில நாட்களாக சண்டை ஏற்பட்டு வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இரு தினங்களுக்கு முன்னர் தம்பதியினருக்கு இடையில் மீண்டும் சண்டை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சமீலு மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தார். அதன் பின்னர் நேராக பொலிஸ் நிலையத்திற்கு சென்ற சமீலு பொலிசாரிடம் மனைவியை கொலை செய்ததாக கூறினார். அதோடு எனது மனைவி வேறு நபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பொலிசாரிடம் காட்டி அவள் எனக்கு துரோகம் செய்ததால் தான் நான் அவளை கொன்றேன் என சமீலு கூறினார்.
இதை தொடர்ந்து சமீலுவை கைது செய்த பொலிஸார் அவர் மனைவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.