மூன்று நாட்கள் தொடர்ந்து பேச மறுத்த காதலி..! காதலன் எடுத்த திடீர் முடிவு.!! சோகத்தில் பெற்றோர்.!!
சென்னையில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். 4 வருடங்களுக்கு மேலாக இந்த காதல் தொடர்ந்துள்ளது.
இந்த வருட இறுதியில் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. குறித்த பெண் தன்னை விட்டு விலகிச் செல்வதாக மணிகண்டன் நண்பர்களிடம் கூறி உள்ளார்.
அதனை உறுதி படுத்தும் விதமாக கடந்த மூன்று நாட்களாக குறித்த பெண் மணிகண்டனுடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். அத்துடன் தொலைபேசி இலக்கங்களும் வேலை செய்யவில்லை. இதனால் மனமுடைந்து போன மணிகண்டன் இரண்டு நாட்கள் வேலைக்கு போகாமல் இருந்துள்ளார்.
இதனால் அவரது நண்பர்கள் தேடி வந்தபோது கதவு உள் பக்கமாக பூட்டப் பட்டிருந்துள்ளது. சந்தேகமடைந்த நண்பர்கள் பொலீஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து கதவை உடைத்து பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மணிகண்டன் மீட்கப் பட்டுள்ளார்.
காதல் மூன்று நாட்கள் பேசாமல் இருந்ததால் மணிகண்டன் எடுத்த முடிவு அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.!