3 முறை கருகலைப்பு, பாலியல் தொல்லை, கொலை மிரட்டல், முன்னாள் அமைச்சர் அதிரடி கைது.!
கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமறைவான முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தனிப்படை அமைத்து போலீஸார் கைது செய்துள்ளனர். பிரபல திரைப்பட நடிகை சாந்தனி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி 5 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்துவிட்டு தற்போது மிரட்டல் விடுப்பதாக கூறி பொலீஸில் புகார் அளித்தார்.
அத்துடன் மூன்று முறை கர்ப்பமானதாகவும் மூன்று முறையும் தனது கருவை கலைத்ததாகவும் சாந்தனி புகாரில் தெரிவித்திருந்தார். ஆனால் மணிகண்டனோ சாந்தனி யார் என்றே தெரியாது என்றும் தன் மீது பொய் குற்றச் சாட்டு வைப்பதாகவும் கூறி முன் ஜாமீன் வாங்கினார்.
ஆனால் மணிகண்டனுக்கு எதிரான அத்தனை ஆதாரங்களையும் சாந்தனி ஒப்படைத்தார். அத்துடன் கரு கலைப்பு தொடர்பாக மதுத்துவமனை விசாரணைகள், சாந்தினி மீதான பரிசோதனை என அனைத்தும் மணிகண்டனுக்கு எதிராக சாந்தனிக்கு சாதகமாக அமைந்தது.
இதனை தொடர்ந்து நீதிமன்றம் மணிகண்டனை கைது செய்ய பொலீஸாருக்கு உத்தரவிட்டார். தனிப்படை அமைத்து மணிகண்டனை தேடி வந்த பொலீஸார் இன்று அவரை கைது செய்துள்ளனர். பாலியல் தொல்லை, கொலை மிரட்டல், கரு கலைப்பு போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த பொலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.!