உடல் மெலிந்து அடையாளமே தெரியாமல் மாறிப்போன நடிகை மஞ்சரி..! வைரலாகும் புகைப்படங்களை பார்த்து ஷாக்கில் ரசிகர்கள்..!!
சினிமாவோ சீரியலோ எதுவாக இருந்தாலும் சில வருடங்கள் தான் நடிகைகளுக்கு வாய்ப்பு, பின் அம்மா அக்கா என நடிப்பார்கள் இல்லாவிட்டால் திரை துறையைவிட்டே சென்று இருப்பார்கள். நீண்ட இடைவெளியின் பின் மீண்டும் வருவார்கள்.
அப்படி 90களில் சீரியல் உலகில் தனக்கான தனி இடத்தை தக்க வைத்திருந்தவர் நடிகை மஞ்சரி. அன்று சிறப்பான தொடர்களான கோலங்கள், அண்ணாமலை போன்ற சீரியல்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. 50திற்கு மேட்பட்ட சீரியல்களில் நடித்து முடித்த மஞ்சரி ஹீரோயின் வில்லி என அனைத்து கதாபாத்திரங்களையும் அசால்ட்டாக செய்தார்.
கோலங்கள் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது நிஜத்தில் திருமணம் செய்துகொண்ட மஞ்சரி சீரியல் நிறைவடைந்ததும் கணவருடன் சிங்கப்பூர் பறந்தார். பெண் குழந்தை பிறந்ததால் சீரியலுக்கு பாய் பாய் சொல்லிவிட்டு குடும்பத்தை கவனிப்பதில் நேரத்தை செலவு செய்தார்.
தற்போது மஞ்சரியின் மகளுக்கு 12 வயதாகிறது. அதனால் மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்துள்ளாராம். சிங்கப்பூரில் தயாராகும் சீரியல் ஒன்றில் மஞ்சரி நடிக்க உள்ளாராம். இந்த நிலையில் மஞ்சரியின் புகைப்படங்கள் சில வெளியாகி ரசிகர்களை ஷாக்காகி உள்ளது..காரணம் மஞ்சரி மெலிந்து போய் உள்ளார்..இதோ வைரலாகும் புகைப்படங்கள்…!!