தமிழக சட்ட மன்ற தேர்தலில் காமெடியனாக மாறிய மன்சூர் அலிகான்.!! அவர் பெற்றுக் கொண்ட வாக்குகள் இவ்வளவு தான்.!!
தமிழக சட்ட மன்ற தேர்தலில் நடிகர் மன்சூர் அலிகான் காமெடி பீசாக மாறியுள்ளதாக மீம்ஸ்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ளன. தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன்களில் ஒருவராக இருந்த மன்சூர் அலிகான் கடந்த வருடம் நாம் தமிழர் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
அதன் பின்னர் தொடர்ந்தும் குறித்த கட்சியில் இருந்து வந்த மன்சூர் அலிகான் இம்முறை சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானித்து நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறினார். பின்னர் சுயேட்சை கட்சியில் தேர்த்தலில் நின்றார்.
இந்த நிலையில் தனது தொகுதியில் முதல் சுற்றில் 16 வாக்குகளும், இரண்டாம் சுற்றில் 22 வாக்குகளும் மூன்றாம் சுற்றில் 41 வாக்குகளும், 4ம் சுற்றில் 51 வாக்குகளும் பெற்று காமெடியனாக மாறிவருகிறார். அதே தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ்பி வேலுமணி மூன்றாம் சுற்றில் 14,875 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார்.
மன்சூர் அலிகான் மாத்திரமே குறித்த தொகுதியில் மிகக் குறைவான வாக்குகள் பெற்றுள்ளார். கடந்த வாரம் விவேக் மரணம் தொடர்பாக பேசி கைது செய்யப் பட்ட மன்சூர் அலிகான் ஜாமீனில் வெளிவந்த நிலையில் இந்த வாக்கு விபரம் அவருக்கு மன உளைச்சலை கொடுக்கும் என்கின்றனர் விமர்சகர்கள்.!!