பிக் பாஸ் போட்டியாளரை கைது செய்த பொலீஸார்..!! மோசடி தான் காரணமா.!?
பிக் பாஸ் வீடு என்றால் ரகளைகளுக்கு குறைவிருக்காது…ஏதேனும் ஒரு நாடகம் அல்லது சப்ரைஸ் என செய்துகொண்டிருப்பார்கள், சிலர் பிக் பாஸ் வீட்டிலேயே நடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் பிக் பாஸ் வீட்டில் நடிப்பு என பலரும் நினைத்திருக்க உண்மையாக நடந்த கைது ஒன்றினால் போட்டியாளர்கள் ஷாக்காகி உள்ளனர்.
தமிழில் பிக் பாஸ் தொடங்கி வெறும் இரண்டு நாள் தான் அதனால் இங்கு இன்னும் எந்த பிரச்சனையும் வெடிக்கவில்லை. இது தமிழ் பிக் பாஸ் பற்றிய செய்தியில்லை, பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி என அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் மராத்தி மொழியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பவர் நடிகர் அபிஜித். இவரை திடீரென பிக் பாஸ் வீட்டிற்குள் புகுந்த பொலீஸார் கைது செய்தனர். இதை பார்த்த பொலீஸார் பிக் பாஸ் குழுவினர் ஏதோ நாடகம் நடத்துவதாக நினைத்துள்ளனர்.
ஆனால் சிறிது நேரத்தில் அபிஜித்தை பொலீஸார் வெளியே அழைத்து செல்ல மற்ற போட்டியாகர்கள் அதிர்ந்துள்ளனர். இது தொடர்பாக தெரிய வருவதாவது அபிஜித் 2015ம் ஆண்டு செக் மோசடி வழக்கில் குற்றம் சுமந்தப் பட்டிருந்தவர்.
இந்த வழக்கு ஆஜராகும் படி பல முறை நோட்டிஸ் அனுப்பியும் அபிஜித் போகாததால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த நடிகரை பொலீஸார் கைது செய்துள்ளனர். பிக் பாஸ் வீட்டில் அனைத்தும் விளையாட்டாக இருப்பதால் இதையும் போட்டியாளர்கள் விளையாட்டு என்று நம்பியதில் தவறு இல்லை தான்..!!