பருக்கள் போல் “மரு” உங்கள் அழகை கெடுக்கிறதா.? இதோ வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்யும் இலகுவான மருத்துவம்..!!
இன்றைய அழகு குறிப்புகள் பகுதியில் அழகு படுத்துவது எப்படி என்று பார்ப்பதை நிறுத்திவிட்டு அழகை கெடுக்கும் மருவை எப்படி விரட்டுவது என்று பார்ப்போம். “மரு” இது சிலருக்கு பரம்பரையாக வருகிறது சிலருக்கு வைரஸின் காரணமாக வருகிறது. எப்படி வந்தாலும் முகத்தை அசிங்கப் படுத்த தான் செய்கிறது. இது சிலருக்கு முகத்தில் வந்தாலும் பலருக்கு கை, கால், தோள், கழுத்து, பகுதிகளில் அதிகமாக வருகின்றது.
இது வலி கொடுக்காவிட்டாலும் சில கொடுமையான நோய்களுக்கு வழி வகுக்கின்றது என்றே சொல்ல வேண்டும். இதனை வலி இன்றி தீர்ப்பது எப்படி? இருக்கிறதே… ஒரு ரூபாய் கூட செலவு இன்றி வீட்டிலேயே செய்யலாம். இதற்கு தேவையானவை: பெரிய வெங்காயம் மற்றும் கல் உப்பு இரண்டும் தான்.
முதலில் வெங்காயத்தின் மேல் பகுதியை வெட்டி எடுத்துவிட்டு நடுப் பகுதியையும் வெட்டி எடுத்து விடுங்கள். பின் அதனுள் சிறிதளவு கல் உப்பு போட்டு வைத்து விடுங்கள். சிறிது நேரத்தில் வெங்காயத்தின் சாறு மற்றும் கல் உப்பின் நீர் இவை இரண்டும் மிக்ஸ் ஆகி திரவம் கிடைக்கும்.
இதனை மரு உள்ள இடத்தில் பூசி வாருங்கள் வலி மற்றும் வடு இன்றி மரு கொட்டி விடும். அதிக மரு உள்ளவர்கள் ஒன்று தொடக்கம் இரண்டு வாரம் வரை பயன்படுத்துங்கள். ஜென்மத்திலும் மரு உங்கள் பக்கம் வரவே வராது.!