தமிழ் பெண்ணுக்கு பிரித்தானியாவில் கிடைத்த மிகப்பெரிய கெளரவ விருது..! குவியும் பாராட்டுக்கள்..! நீங்களும் வாழ்த்தலாமே…இதோ புகைப்படங்கள்..!!
தமிழர்கள் தங்கள் திறமையை எங்கு நிரூபித்தாலும் அதற்கான அங்கிகாரம் கிடைக்கும் போது அதனை பாராட்ட வேண்டியது எமது கடமையாகும். அந்த வகையில் இந்த தகவலையும் தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி. இலங்கையை பூர்வீகமாக கொண்ட அருள் பிரகாஷம் லண்டனின் வசித்து வந்த நிலையில் அங்கு திருமணம் செய்துகொண்டார்.
இவருக்கு மாதங்கி என்ற பெண் குழந்தை பிறந்து 6 மாதத்தில் விசா பிரச்சனை ஏற்பட்டதால் மீண்டும் யாழ்ப்பாணம் சென்றனர். அங்கு பாடசாலையில் சேர்ந்து படித்து வந்த மாதவி இலங்கையில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக தனது 10 வயதில் மீண்டும் லண்டன் சென்றார். ஏற்கனவே பல துன்பங்களை அனுபவித்து விட்டதால் லண்டனில் தனது திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.
ஆங்கில திறமை சற்று அதிகம் இருந்ததால் ஆங்கில பாடகியானார் மாதங்கி அருள் பிரகாஷம். இவரது பாடல் அங்கு அதிகம் பிரபலமானதால் மக்களால் பேசப் படும் பிரபலமான மாதங்கிக்கு பிரித்தானிய மகாராணி 2வது எலிசபெத்தின் ஜனன தினத்தை முன்னிட்டு வழங்கப் படும் உயரிய விருது வழங்கப் பட்டுள்ளது.
இசை துறையில் பணியாற்றி வரும் மாதங்கியை கெளரவிக்கும் முகமாக கடந்த செவ்வாய் கிழமை Buckingham அரண்மனையில் வைத்து பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ் அவர்களால் வழங்கப் பட்டுள்ளது. இந்த விருதை தனது தாயுடன் சென்று மாதங்கி பெற்றுக் கொண்டுள்ளார். இதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருவதால் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்..!!