முகத்தில் எந்த நேரமும் எண்ணெய் வடிவது போல் இருக்கிறதா.!? இதனால் முகப்பருக்கள் தோன்றலாம்..! அதனால் இதை மட்டும் செய்யுங்கள் போதும்…!!
புரட்சி வானொலியின் அழகு குறிப்புகள் பகுதியில் ஆண் பெண் இருபாலருக்குமான குறிப்பு ஒன்றை பார்க்கப் போகின்றோம். இதை ஆயில் சருமம் கொண்ட ஆண்/ பெண் இருவருமே பாவிக்க முடியும். பொதுவாக ஆயில் ஸ்கின் கொண்டவர்களுக்கு தான் அதிக அளவில் முகப்பரு வருகிறது.
ஆயில் ஸ்கின் உள்ளவர்களின் முகத்தில் தூசி, வெயில் வெப்பம், போன்றவற்றால் சீக்கிரம் பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது. இதற்கான தீர்வு தான் இது..! 7 எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள், அதில் மூன்று பழத்தின் தோல்களை சீவி எடுத்து அந்த தோலைகளை சிறியதாக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது 7 எலுமிச்சை பழங்களையும் வெட்டி சாறை எடுத்துக் கொள்ளுங்கள். 7 எலுமிச்சையின் சாறு எடுத்த பின் அந்த சாற்றின் அளவை போல் இரண்டு மடங்கு தண்ணீரையும் கலந்துகொள்ளுங்கள். இதனுடன் ஏற்கனவே நறுக்கி வைத்திருந்த எலுமிச்சை தோலையும் சேர்த்து கலந்து
பிரஷ் பண்ண கூடிய போத்தலில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள்.இதனை இரவில் தூங்கச் செல்லும் முன் பஞ்சில் நனைத்து முகத்தை நன்றாக மசாஜ் செய்யுங்கள் ஒரு ஐந்து நிமிடம் கழித்து முகத்தை கழுவி விட்டு தூங்குங்கள். இதனை தொடர்ந்து செய்து வர முற்றிலும் பரு தொல்லை நீங்குவதுடன் முகமும் பொலிவு பெறும்.முடிந்தவர்கள் முல்தானி பவுடரை இந்த டோனரில் கலந்து முகத்தில் பூசி வர முகம் அழகாக தெரிவதுடன், எண்ணெய் ஸ்கின் பிரஷ் ஆகும்.!