மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிட்டால் குணமாகும் நோய்கள் என்ன.!? மீன் எண்ணெய் மாத்திரைகளை யார் எல்லாம் சாப்பிடலாம் இதோ முழுவிபரம்.!
மீன் எண்ணெய் மாத்திரை” இது சாதாரணமாக கிடைக்கக் கூடியது என்பதால் பலருக்கு இது எப்படி செய்கின்றனர் மற்றும் இதன் பயன்கள் தெரியாது…அதனால் இன்று நாம் பார்க்கப் போவது மீன் எண்ணெய் மாத்திரை யார் எல்லாம் சாப்பிடலாம்? எதில் இருந்து மீன் எண்ணெய் மாத்திரை தயாரிக்கின்றனர் போன்ற விடயங்களை பார்ப்போம்.
எமக்கு கையில் கிடைக்காத அதே நேரம் சமைத்து சாப்பிட முடியாத மீன்களில் இருந்து தான் இந்த மீன் எண்ணெய் மாத்திரைகள் எடுக்கப் படுகிறது. குறிப்பாக திமிங்கிலத்தின் கல்லீரலில் இருந்து எடுக்கப் பட்டு பல விதமான சுத்திகரிப்புக்கு பின் மாத்திரைகளாக மக்களின் பாவனைக்கு வருகிறது.
இந்த மாத்திரையில் விட்டமின் ஏ, விட்டமின் டி மற்றும் ஒமேகா 3s போன்ற சத்துக்கள் இருக்கின்றது. இதனால் பல நோய்களுக்கு தீர்வாகிறது. இது திடீரென ஏற்படும் மாரடைப்படை கூட தடை செய்ய உதவுகிறது. அதே போல் கண் பார்வையை அதிகரிக்க இந்த மீன் என்னை மாத்திரைகள் உதவுகிறது. ஆஸ்த்துமா, மற்றும் சுவாச சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மீன் எண்ணெய் மாத்திரை மிகவும் உதவுகிறது.
மீன் எண்ணெய் மாத்திரையை அனைவரும் பயன்டுத்த முடியும் என்றாலும் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் போன்றவர்கள் இந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வது என்றால் கண்டிப்பாக வைத்திய அலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.இது முற்றிலும் மீன் தயாரிப்பது என்பதால் மீன் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படுபவர்கள் இதனை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
மீன் எண்ணெய் மாத்திரை கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கக் கூடியது. அதனால் உடல் எடை கூடும் என பயம் தேவை இல்லை. உடல் எடை முற்றிலும் குறைந்துவிடும். சோ அனைவருமே பயன் படுத்தலாம்..! இது பயன் உள்ளதாக இருந்தால் பகிருங்கள்..!