குழந்தையுடன் சென்ற மனைவி மற்றும் மாமியாரை நடு வீதியில் வைத்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்த நபர்.! சிசிடிவியில் சிக்கிய காட்சிகள்.!
நடு வீதியில் வைத்து குழந்தையுடன் சென்ற மனைவி மற்றும் மாமியாரை கொடூரமாக நபர் ஒருவர் கொலை செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த பூங்கொடி மற்றும் அவரது மகள் மீனா ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப் பட்டுள்ளனர்.
மீனாவிற்கும் அதே ஊரை சேர்ந்த நம்பிராஜ் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று இருந்த நிலையில் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடந்துள்ளது. கருத்து வேறுபாடு அதிகரித்த நிலையில் மீனா நம்பிராஜை பிரிந்து குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஒரு வருடமாக தாய் வீட்டில் இருந்த மீனா சம்பவ தினத்தன்று தாயுடன் குழந்தைக்கு மருந்து எடுப்பதற்காக வைத்தியசாலை சென்றுள்ளார். மீனா மற்றும் பூங்கொடி வரும் வழியில் நின்று கொண்டிருந்த நம்பிராஜ் மீனாவையும் மீனாவின் தாயாரையும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.
அவர்கள் இறந்ததும் அப்படியே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் சடலங்களை வைத்தியசாலைக்கு அனுப்பியதுடன் குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த கொலை காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி உள்ள நிலையில் நம்பிராஜை பொலீஸார் தேடி வருகின்றனர்.!!