நான் “கற்பழித்து கொலை செய்யப்பட்டால் அதற்கு நடிகர் சூர்யாவே காரணம். ! மீரா மிதுன் பரபரப்பு…!!
விஜய், திரிஷா, நயன்தாரா, ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயனை தொடர்ந்து சூப்பர் மாடல் என தன்னை கூறிக் கொள்ளும் மீரா மிதுனின் பார்வையில் தற்போது விழுந்திருப்பவர் நடிகர் சூர்யா. ஒவ்வொரு நடிக நடிகையாக வம்பிழுத்த மீரா மிதுன் நடிகர் சூர்யா பற்றி தவறானவற்றை பதிவிட்டுள்ளார்.
அண்மையில் மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ ஒன்றில் நடிகர் சூர்யா ஒரு வாரிசு நடிகர் என்பதால் மட்டுமே வாய்ப்பு வருகிறது, அவருக்கு நிஜத்தில் நடிக்கவே தெரியாது, அவரது அப்பா சினிமா இல்லாவிட்டால் சூர்யாவின் முழு வாழ்க்கையும் வீணாகி இருக்கும் என குறிப்பிட்டதுடன் சாதாரண ஒரு காட்சிக்கு கூட 20 டேக் எடுப்பார் சூர்யா என குறிப்பிட்டிருந்தார்.
இதனால் கடுப்பான சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை திட்டி வரும் நிலையில் மறுபடியும் மீரா மிதுன் பதிவொன்றை இட்டுள்ளார். அதில் சூர்யா ரசிகர்கள் எந்த நேரமும் கால் மெசேஜ் செய்து வருகின்றனர். இது வரை ஆயிரத்திற்கு மேற்பட்ட அழைப்புகள் வந்துவிட்டது.
என்னை கற்பழித்து கொலை செய்வதாக மிரட்டுகின்றனர். எனக்கு உயிர் மீது பயமில்லை, ஆனால் மானம் மீது பயம் உள்ளது. எனக்கு ஏதேனும் நேர்ந்தால் அது சூர்யாவால் தான், என்பதை இங்கு பதிவிடுகிறேன் என கூறியுள்ளார்